siruppiddy nilavarai.com

Footer Widget 1

செவ்வாய், 26 மார்ச், 2013

தொடரும் இனக்கலவரம்: மக்கள் ஊரை விட்டு ஓட்டம்


மியான்மர் நாட்டின் மெய்திலா நகரில் புத்த மதத்தினர் மற்றும் முஸ்லிம் மதத்தினரிடையே கடந்த புதன்கிழமை முதல் கலவரம் வெடித்தது.
அதனை தொடர்ந்து நடைபெற்ற மோதலில் 30 பேர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. கலவரத்தை கட்டுப்படுத்த ராணுவத்தினர் அங்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் மியான்மரின் மத்தியில் உள்ள கோன் நகரில் 300-க்கும் மேற்பட்டோர் திரண்டனர். அவர்கள் வீடுகள் மற்றும் மசூதிகளை இடித்தும், கொளுத்தியும் நாசமாக்கினர். இந்த கலவரத்திற்கு காரணமானவர்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை.
இறப்பு குறித்த செய்திகளும் கிடைக்கவில்லை. இதனால் ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை காலிசெய்து அகதிகளாக வெளியேறி வருகின்றனர். கடந்த வருடம் ராக்கைன் மாகாணத்தில் ஏற்பட்ட இனக்கலவரத்துக்கு 200 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

0 comments:

கருத்துரையிடுக