siruppiddy nilavarai.com

Footer Widget 1

ஞாயிறு, 3 மார்ச், 2013

அசையும் அசையா சொத்துக்களின் முடக்கத்தை


2008 ஆம் ஆண்டு பாகிஸ்தானியில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தால் முன்னாள் பிரதமர் பர்வேஸ் முஷாரப் இங்கிலாந்து மற்றும் ஜக்கிய அரபு நாடுகளில் தஞ்சமடைந்தார்.
பெனாசிர் பூட்டோ அவர்கள் 2007 ஆம் ஆண்டு கொல்லப்பட்டபோது அப்போதைய ஆட்சிப்பொறுப்பில் இருந்த முஷாரப் போதிய பாதுகாப்பு அவருக்கு வழங்கத் தவறியது ஏன் என்பன தொடர்பான வழக்குகள் பாகிஸ்தான் தீவிரவாத தடுப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தவேளை இந்த வழக்கில் விளக்கமளிக்க வேண்டிய முஷாரப் நாட்டைவிட்டு வெளியேறிவிட்டதால் அவரை “தலைமறைவாக இருக்கும் நபர்” என அறிவித்த தீவிரவாத தடுப்பு கோர்ட் முஷராப்பின் அசையா சொத்துகள் மற்றும் வங்கிகளில் இருக்கும் ரொக்கப்பணம் ஆகியவற்றை முடக்கவும் உத்தரவிட்டது.
கோர்ட்டின் இந்த உத்தரவை எதிர்த்து முஷராப்பின் மனைவி சேஹ்பா முஷாரப் மனு தாக்கல் செய்தார். தான் வசிக்கும் வீடு முஷராப் தனக்கு பரிசாக வழங்கியதாகவும் வங்கிகளில் உள்ள பணம் அனைத்து வெள்ள நிவாரணப் பணிகளுக்கு உதவும் வகையில் உருவாக்கப்பட்ட அறக்கட்டளைக்கு சொந்தமானது எனவும் அவ் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் சேஹ்பா முஷாரப் வாதங்களை மெய்ப்பிபதற்கான ஆதாரங்களை அவரது வழக்கறிஞர் இலியாஸ் சித்திக்கி தாக்கல் செய்யாததால் மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிபதி அறிவித்ததோடு முன்னர் வெளியிட்டிருந்த ஆணை தொடர்ந்து நீடிக்குமெனவும் தெரிவித்தார்

0 comments:

கருத்துரையிடுக