siruppiddy nilavarai.com

Footer Widget 1

சனி, 11 மே, 2013

60 மில்லியன் டொலர் அரசு வங்கி பணத்தை


வெனிசூலாவில் உள்ள அரசு பொருளாதார வங்கியில் இருந்த இருப்பு தொகை சுமார் 60 மில்லியன் டொலரை, நிதி மேலாளரின் உதவியோடு சுவிஸ் வங்கிக்கு மாற்றி மனம் போன போக்கில் செலவழித்தவர்களைப் பொலிசார் கைது செய்துள்ளனர்.
மரியா டி லாஸ் ஏங்கெலெஸ் கோன்ஸாலெஸ்(Maria de los Angeles Gonzalez) என்ற பெண் அதிகாரி பேண்டஸ் எனப்படும் வெனிசுலா அரசு வங்கியில் நிதி மேலாளர் ஆவார்.
தோமாஸ் ஆல்பெர்ட்டோ கிளார்க்(Tomas Alberto Clarke) மற்றும் ஜோஸ் அலிஜாண்ட்ரோ ஹுந்தாதோ(Jose Alejandro Hurtado) என்ற இருவரும் மரியாவிடம் சென்று வங்கி இருப்பைக் கையாளும் பொறுப்பைத் தங்களுக்கு வழங்குமாறு வேண்டியுள்ளனர்.
இவர்கள் வங்கியாளர் மற்றும் வர்த்தகர்களுக்கு தொழில் தரகர்களாக இருந்ததனால் மரியாவும் இவர்களைத் தமது பிரதிநிதிகளாக நியமித்து நிதி கையாளும் பொறுப்பை ஒப்படைத்துள்ளார்.
கடந்த 2009ம் ஆண்டு ஏப்ரல் முதல் 2010ம் ஆண்டு யூன் வரை இந்த மூவரும் வெனிசூலா வங்கியின் இருப்பை சுவிஸ் வங்கிக்கும், மியாமி நகரில் உள்ள மற்றொரு வங்கிக்குமாக மாற்றிவிட்டனர். வங்கிகளின் பெயர்களைப் பொலிசார் வெளியிடவில்லை.
மேலும் அவர்கள் வெனிசூலா அரசுப் பணத்தைத் தங்களின் சொந்த உபயோகத்துக்கும் பயன்படுத்தி வந்தனர். இதனை அறிந்த அமெரிக்க அதிகாரிகள் இவர்கள் மூவரையும் கைது செய்துள்ளனர்

0 comments:

கருத்துரையிடுக