siruppiddy nilavarai.com

Footer Widget 1

புதன், 1 மே, 2013

பெண்களுக்கும் கருத்தடை மாத்திரையை விற்கலாம்:


முறையற்ற கருசிதைவுகள் மூலம் பெண்களுக்கு ஏற்படும் ஆபத்துக்களைக் குறைக்க டொக்டரின் மருந்துசீட்டு இல்லாமல் 15 வயது பெண்களுக்கும் கருத்தடை மாத்திரையை விற்கலாம் என்று அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டு கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.
தேவையற்ற கருவை தவிர்க்க பெண்கள் பல்வேறு கருத்தடை முறைகளை கடைபிடிக்கின்றனர். அவற்றில், தனது துணைவருடன் உடலுறவில் ஈடுபட்ட 72 மணி நேரத்திற்குள் கருத்தடை மாத்திரை உட்கொள்ளும் முறையும் ஒன்று.
பெரும்பாலும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளில் வசிக்கும் பெண்களின் விருப்பத் தேர்வு இவ்வகை மாத்திரைகள் தான்.
எதிர்பாராத விதமாக உடலுறவு கொள்ள வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகும் பெண்கள், கவலையில்லாமல் மருந்துக் கடைகளுக்கு சென்று மாத்திரைகளை வாங்கி உபயோகிக்க தொடங்கினர்.
மேலும் மிக குறைந்த வயதில் பெண்கள் ஆண் துணையை தேடிக்கொள்கிறார்கள் என்று கருதிய அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டு கவுன்சில், கடந்த 2011ல் இவ்வகை மாத்திரைகளை டொக்டரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் 17 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு விற்க தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது, இந்த தடையை நீக்கி 15 வயதுக்கு மேற்பட்ட பெண்களும் இனி 'பிளான்-பி-ஒன் ஸ்டெப்' எனப்படும் கருத்தடை மாத்திரைகளை டொக்டரின் பரிந்துரை இன்றி வாங்கிக் கொள்ளலாம் என்று அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டு கவுன்சில் நேற்று அறிவித்துள்ளது.
மேலும் இதன் மூலம் கடந்த 2011ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட தடை மசோதாவில் 17 வயது என்பதை மாற்றி 15 வயதுக்குட்பட்டவர்களுக்கு என்று மாற்ற போவதாகத் தெரிவித்துள்ளது
 

0 comments:

கருத்துரையிடுக