siruppiddy nilavarai.com

Footer Widget 1

வெள்ளி, 17 மே, 2013

விமான நிலையத்தில் வைரங்களை கொள்ளையடித்த.,


பெல்ஜியத்தில் உள்ள விமானநிலையத்தில் வைரக் கொள்ளையில் ஈடுபட்ட 31 பேர் கொண்ட கொள்ளைக் கூட்டத்தில் ஒருவரை பிரான்சிலும், 6 பேரை சுவிட்சர்லாந்திலும், மீதி 24 பேரை இன்று பிரஸ்ஸல்ஸ் நகர் அருகிலும் சுவிஸ் பொலிசார் கைது செய்துள்ளனர்.
மூன்று மாதங்களுக்கு முன்னர் பெப்ரவரி மாதம் 18ம் திகதி அன்று நடைபெற்ற இந்தக் கொள்ளை, பிரஸ்ஸல்ஸ் சர்வதேச விமானநிலையத்தில் நடந்த மிகப்பெரிய கொள்ளையாகும்.
விமானம் சூரிச்சுக்குப் புறப்படத் தயாராக இருந்த நிலையில், இந்தக் கொள்ளையர்கள் சரக்குப் பெட்டகத்தைத் திறக்கும் படி மிரட்டி அதில் ஏற்பட்டிருந்த வைரங்களையும், ரொக்கப் பணத்தையும் ஏராளமாகத் திருடிச் சென்றனர்.
அவர்கள் கொள்ளையடித்த ரொக்கப்பணத்தில் பெரும் பகுதியை பொலிசார் மீட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

0 comments:

கருத்துரையிடுக