siruppiddy nilavarai.com

Footer Widget 1

சனி, 18 மே, 2013

ஐ.நாவுடன் முரண்டு பிடிக்கும்?

சிறிலங்காவுக்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கும் இடையிலான இராஜதந்திர மோதல்கள் தொடர்வதாக தெரிவிக்கப்படுகிறதுஐ.நாவின் சிறப்புப் பிரதிநிதி ஒருவர் சிறிலங்காவுக்கு செல்ல கோரிக்கை விடுத்த போதும், அது சிறிலங்கா அரசாங்கத்தினால் தட்டிக்கழிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நீதிக்குப் புறம்பான படுகொலைகள் தொடர்பான விவகாரங்களுக்கான ஐ.நாவின் சிறப்புப் பிரதிநிதி கிறிஸ்ரொவ் ஹெய்ன்ஸ் கொழும்பு வருவதற்கு விருப்பம் வெளியிட்டுள்ள போதிலும், சிறிலங்கா அரசாங்கம் இதுவரை அதற்கு அனுமதி வழங்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

சனல் 4 வெளியிட்ட நீதிக்குப் புறம்பான படுகொலைகள் குறித்த விசாரணைகளை நடத்தவே ஐ.நா பிரதிநிதி கொழும்பு வர விருப்பம் வெளியிட்டிருந்தார்.

இந்த காணொளி உண்மையானதே என்று 2011 ஏப்ரலில் கிறிஸ்ரொவ் ஹெய்ன்ஸ் கூறியிருந்தார்.

இதன் பின்னர் சிறிலங்காவுக்கு வர அவர் விருப்பம் வெளியிட்டிருந்த போதிலும், அதற்கு சிறிலங்கா அரசாங்கம் பதில் அனுப்பவில்லை.

இந்தநிலையில், வரும் வாரம் ஜெனிவாவில் கூடவுள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 23வது அமர்வில் அறிக்கை சமர்ப்பிப்பதற்காக, சிறிலங்காவுக்கு வர அனுமதிக்கும் படி அவர் மீண்டும் கோரியுள்ளார்.

எனினும் சிறிலங்கா அரசாங்கம் அதற்கு எந்தப் பதிலையும் அளிக்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 comments:

கருத்துரையிடுக