siruppiddy nilavarai.com

Footer Widget 1

திங்கள், 1 ஜூலை, 2013

பிரதம பூசாரி கொலை: சந்தேகநபர் ஒருவர் கைது

 
செல்லக்கதிர்காமம் ஈஸ்வரா தேவாலயத்தின் பிரதம பூசகர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் பதுளையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த மாதம் 5ம் திகதி 70 வயதான ராஜபக்ச முதியான்சேலாகே பிரேமதாச என்ற பூசகரின் சடலம் கோயிலுக்கு பின்புறமாக உள்ள காட்டில் உரப் பையொன்றில் கட்டப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவந்த பொலிஸார் சந்தேகநபர் ஒருவரை பதுளையில் கைது செய்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் இன்று திஸ்ஸமஹாராமை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
சந்தேகநபர் அளித்துள்ள வாக்குமூலத்திற்கு அமைய மேலும் ஒருவரை கைது செய்வதற்கான விசாரணைகளை கதிர்காமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

0 comments:

கருத்துரையிடுக