siruppiddy nilavarai.com

Footer Widget 1

வெள்ளி, 5 ஜூலை, 2013

கற்பழிக்கப்படுவதை பெண்களே விரும்புகிறார்கள்:


தாங்கள் கற்பழிக்கப்படுவதை சில பெண்களே விரும்புகிறார்கள் என்று கூறியுள்ள இஸ்ரேல் நீதிபதியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
டெல் அவிவ் மாவட்ட நீதிபதி நிஸ்ஸின் யஷயே என்பவர் தான் இப்படி கருத்து கூறியுள்ளார்.
கற்பழிப்பு வழக்கு ஒன்றை விசாரித்த யஷயே கருத்து தெரிவிக்கையில், சில பெண்கள் இருக்கிறார்கள், அவர்களுக்கு தாங்கள் கற்பழிக்கப்படுவது பிடித்திருக்கிறது, அதை விரும்பவும் செய்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.
இந்தக் கருத்து இஸ்ரேலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பிரதமர் பெஞ்சமின் நதான்யாஹுவும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதேபோல இஸ்ரேல் நாடாளுமன்றத்தின் பெண்கள் நல கமிட்டியும் கண்டனம் தெரிவித்துள்ளது.
13 வயது சிறுமி கற்பழிப்பு வழக்கில்தான் இந்த நீதிபதி இப்படிக் கருத்து தெரிவித்துள்ளார்.
நான்கு பாலஸ்தீனியர்கள் சேர்ந்து இந்தப் பெண்ணை பலாத்காரம் செய்தனர். அவர்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டும், அவர்கள் மேல்முறையீடு செய்தனர்.
அந்த வழக்கு விசாரணையின் போது தான் நீதிபதி இவ்வாறான கருத்தை தெரிவித்துள்ளார்.

0 comments:

கருத்துரையிடுக