siruppiddy nilavarai.com

Footer Widget 1

செவ்வாய், 9 ஜூலை, 2013

இலங்கைச் சிறுவன் அவுஸ்திரேலிய தடுப்பு முகாமில்

  
11 வயதான இலங்கைச் சிறுவன் ஒருவன் அவுஸ்திரேலியாவின் தஸ்மானியா  தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சட்டவிரோதமான முறையில் புகலிடம் கோரியதனால் இவ்வாறு சிறுவன் தடுத்து வைக்கப்பட்டுள்ளான்.

குறித்த சிறுவன் தடுத்து வைக்கப்பட்டுள்ள தஸ்மானியா ஹோபார்ட் முகாமிற்கு அண்மையில் அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் டோனி புர்க்கே விஜயம் செய்துள்ளார். குறித்த தடுப்பு முகாம் சிறுவர்களை நீண்ட காலத்திற்கு தடுத்து வைக்க உகந்ததல்ல எனத் தெரிவித்துள்ளார்.

11 வயதான இலங்கைச் சிறுவனை தடுப்பு முகாமிலிருந்து விடுவிக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்

0 comments:

கருத்துரையிடுக