siruppiddy nilavarai.com

Footer Widget 1

புதன், 7 ஆகஸ்ட், 2013

பறக்கும் சைக்கிளை உலகின் முதல் கண்டுபிடித்து லண்டன்


 
 லண்டனைச் சேர்ந்த விஞ்ஞானிகளான, ஜான் போடன் மற்றும் யானிக் ரீட் ஆகியோர் இணைந்து உலகில் முதல் பறக்கும் சைக்கிளை வடிவமைத்து சாதனைப்படைத்துள்ளனர்.
பல ஆண்டுகளாக பறக்கும் சைக்கிளை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்ட இவர்கள் இதன் பயனாக குறைந்த எடையும் அதிக திறனும் உடைய காற்றாடியும் இறக்கைகளும் பொருத்தப்பட்ட சைக்கிளை வடிவமைத்து உள்ளனர்.
பயோ டீசல் மூலம் சைக்கிளை இயக்குவதற்கான சிறிய இன்ஜின் வடிவமைக்கப்பட்டு அதில் பொருத்தப்பட்டு உள்ளது. இந்த இன்ஜின் மூலம் இயக்கப்படும் சைக்கிளானது, சற்று உயரத்தில் பறக்க ஆரம்பித்தவுடன் காற்றின் உதவியுடன் காற்றாடி சுழல ஆரம்பிக்கிறது.
இதனால் குறைந்த எடையில் வடிவமைக்கப்பட்ட சைக்கிள் காற்றின் உதவியுடன் பறக்கிறது. அதிக எரிபொருள் செலவில்லாமல் 40 கி.மீ., வேகத்தில் இயங்கும் இந்த சைக்கிள் தரையிலிருந்து 4,000 அடி உயரம் வரை பறக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
இதன் வடிவமைப்பாளர்கள் பறக்கும் சைக்கிளை மேலும் நவீனப்படுத்தி உலக அளவில் இதை அறிமுகம் செய்ய திட்டமிட்டு உள்ளனர். பலரையும் அணுகி அதற்கான நிதி திரட்டும் பணியிலும் ஈடுபட்டு உள்ளனர். இந்த பறக்கும் சைக்கிளை இயக்க லைசென்சு எதுவும் தேவையில்லை என்பதே இதன் சிறப்பம்சமாகும்

0 comments:

கருத்துரையிடுக