siruppiddy nilavarai.com

Footer Widget 1

செவ்வாய், 24 செப்டம்பர், 2013

எய்ட்ஸை ஒழிக்க 1 பில்லியன் டொலர் வழங்கும் பிரிட்டன்


 உலகளவில் கொடிய நோய்களான எய்ட்ஸ், மலேரியா, டி.பி போன்ற போன்ற நோய்களுக்காக அடுத்த மூன்று வருடங்களில் 1 பில்லியன் டொலர் வழங்குவதாக பிரிட்டன் அறிவித்துள்ளது.

சர்வதேச மேம்பாட்டு செயலாளர் ஜஸ்டின் கிரினிங் இந்த அறிவிப்பை இன்று ஐக்கிய நாடுகள் சபையின் வறுமை ஒழிப்பு குறித்தான கூட்டத்தில் தெரிவித்தார்.

2015ம் ஆண்டு முடிவிற்குள் எய்ட்ஸ் நோய் பரவுவதை தடுத்து குணப்படுத்த வேண்டும் என்பதை முக்கிய நோக்கம் என்று கூறியுள்ளார்.
உலகளவில் இதற்காக 2014-2016ம் ஆண்டுக்குள் 15 பில்லியன் டொலர் திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவும் 1.65 பில்லியன் டொலர் தரவுள்ளது

0 comments:

கருத்துரையிடுக