siruppiddy nilavarai.com

Footer Widget 1

சனி, 30 நவம்பர், 2013

பிரான்சில் உயிரை விட்ட பிரித்தானிய தம்பதி

பிரான்சில் இரண்டு லாரிகளுக்கிடையே நசுக்கப்பட்டு 54 வயதுடைய பிரித்தானிய தம்பதியினர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

வட பிரான்ஸில் இன்று 11.30 மணியளவில் இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
விபத்து நடந்தபோது இரண்டு லாரிகள் சடுதியாக நிறுத்தப்பட்டபோது எதிரே வந்த தம்பதியினர் பயணம் செய்த கார் நசுக்கப்பட்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதில் சம்பவ இடத்திலேயே பிரித்த்தானிய தம்பதியினர் உயிரிழந்துள்ளனர். மேலும் வாகன ஓட்டுனர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இதுகுறித்து பொலிசார் கூறுகையில், இரண்டு ஓட்டுனர்களும் எங்களது பாதுகாப்பில் உள்ளனர் என்றும் அவர்களுக்கு மது பரிசோதனைகள் நடத்தப்பட்டன. எனினும் அவர்கள் மது அருந்தவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
 

0 comments:

கருத்துரையிடுக