siruppiddy nilavarai.com

Footer Widget 1

வெள்ளி, 28 பிப்ரவரி, 2014

போக்குவரத்து திட்டத்துக்கு ரூ.19 லட்சம் கோடி

அமெரிக்காவில் சாலை மற்றும் ரயில் போக்குவரத்து மேம்பாட்டுக்கான திட்டப் பணிகளுக்கு 30,000 கோடி டாலரை (இந்திய மதிப்பில் சுமார் ரூ.18.59 லட்சம் கோடி) அதிபர் ஒபாமா ஒதுக்கீடு செய்துள்ளார்.

அமெரிக்காவில் வரும் நவம்பரில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கிடையே, அதிபராக 2ஆவது முறையாக பொறுப்பேற்ற பின் நிலவும் அரசியல் மந்த நிலையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியாக இந்த அறிவிப்பை ஒபாமா வெளியிட்டிருப்பதாக கருதப்படுகிறது.
இந்த நிதி ஒதுக்கீட்டுத் திட்டம், செப்டம்பர் மாதம் காலாவதியாகவுள்ள தற்போதைய போக்குவரத்து நிதி மசோதாவுக்குப் பதிலாக இருக்கும்.

போக்குவரத்துக் கட்டமைப்புகளை வரும் ஆண்டுகளில் மேம்படுத்துவதற்கு முக்கியத்துவம் அளிப்பதை நோக்கமாகக் கொண்டு நிதித் திட்டத்தை அறிவித்துள்ள ஒபாமா, குடியரசு கட்சி எம்.பி.க்களின் அவநம்பிக்கையில் இருந்து வெற்றி காண முடியும் என நம்புகிறார்.
இந்த நிதி தொடர்பான விவரங்கள் அடுத்த வாரம் தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட்டில் தெரியவரும்.

0 comments:

கருத்துரையிடுக