siruppiddy nilavarai.com

Footer Widget 1

சனி, 8 பிப்ரவரி, 2014

வெடிகுண்டு வச்சுருக்கேன்! விமானத்தை கடத்த முயன்ற !

நடுவானில் பறந்து கொண்டிருந்த போது குண்டு இருப்பதாக மிரட்டி விமானத்தை கடத்த முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைனின் கார்கோவ் நகரத்தில் இருந்து 110 பயணிகளுடன் விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது.
அப்போது, விமானத்தில் இருந்த பயணி ஒருவன் எழுந்து திடீரென கூச்சலிட்டுள்ளான்.
விமானத்தில் குண்டு வைத்திருப்பதாகவும், தான் கூறியபடி விமானத்தை ரஷ்யாவின் சோச்சி நகருக்கு செலுத்தும்படியும் உத்தரவிட்டான், இதனால் பயணிகள் அலறி கூச்சல் போட்டனர்.
உடனடியாக சாதுர்யமாக செயல்பட்ட விமானி, கட்டுப்பாட்டு அறைக்கு ரகசிய தகவலை அனுப்பினார்.
இதனையடுத்து விமானிகளின் காக்பிட் அறைக்குள் நுழைய முடியாதபடி கதவுகள் அனைத்தும் மூடப்பட்டன.
விமானம் பத்திரமாக துருக்கியில் உள்ள இஸ்தான்புல் நகரத்தில் தரையிறக்கப்பட்டது, அங்கு பாதுகாப்பு படையினர் ஆசாமியை சுற்றி வளைத்து பிடித்தனர்.
இத்தகவலை துருக்கி நாட்டு போக்குவரத்துதுறை செயலாளர் ஹபீப் சோலுக் வெளியிட்டுள்ளார்.
இதற்கிடையே தீவிரவாத அச்சுறுத்தல் அதிகம் இருப்பதால், சோச்சி நகரத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.
 

0 comments:

கருத்துரையிடுக