siruppiddy nilavarai.com

Footer Widget 1

புதன், 19 பிப்ரவரி, 2014

தகவல்அபாய நிலையில் பத்திரிக்கையாளர்கள்!

 உலகம் முழுவதிலும் கடந்தாண்டு மட்டும் 134 பத்திரிக்கையாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
லண்டனை சேர்ந்த சர்வதேச செய்தி பாதுகாப்பு நிறுவனம் London-based International News Safety Institute(INSI), ஆபத்தான இடங்களில் செய்திகள் சேகரிக்கும் பத்திரிக்கை நிரூபர்களுக்கு பாதுகாப்பு பயிற்சியை வழங்கி வருகின்றது.
இந்நிறுவனம் கடந்தாண்டு உலகம் முழுவதும் பத்திரிக்கையாளர்களுக்கு ஆபத்தான நாடுகளை பற்றி ஆய்வு செய்தது.
இதில் கடந்த 2013ம் ஆண்டில் மட்டும் 134 பத்திரிக்கையாளர்கள், ஊடக பணியாளர்கள் கொல்லப்பட்டதாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவர்களில் 65 பேர் சிரியாவில் நடந்த உள்நாட்டு போரில் கொல்லப்பட்டுள்ளனர்.
பிலிப்பைன்சில் 14 பேரும், இந்தியாவில் 13 பேரும் மற்றும் பாகிஸ்தானில் 9 பேரும் கொல்லப்பட்டுள்ளனர்.
பெரும்பாலான நபர்கள் உள்நோக்கத்துடன் வேண்டுமென்றே குறிவைத்து கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
உலகின் முன்னணி செய்தி அமைப்புகளின் நிதியுதவியுடன் கடந்த 1996ம் ஆண்டிலிருந்து ஆய்வில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
 

0 comments:

கருத்துரையிடுக