siruppiddy nilavarai.com

Footer Widget 1

புதன், 12 மார்ச், 2014

திருடிய ஓவியங்கள் ஒப்படைப்பு

  நாஜிக்களால் திருடப்பட்ட மூன்று ஓவியங்களை பிரான்ஸ், உரிய நபர்களிடம் ஒப்படைக்க உள்ளது.
பிரான்சின் கிழக்கு பகுதியில் உள்ள டிஜான் நகர அருங்காட்சியகத்தில் நாஜிக்களால் திருடப்பட்ட ஓவியங்கள் உள்ளன.

ஜேர்மானிய விநியோகஸ்தகர்களை சார்ந்த இந்த கலைப்படைப்புகளை, கடந்த 1935ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் யூத பொருட்கள் ஏலத்தில் பிரான்ஸ்  வாங்கியுள்ளதாக தெரிகிறது.
எனவே இதனை உரிய நபர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என பிரான்ஸ் கலாச்சார அமைச்சர் ஆவுரிலி பிலெப்பெட்டி தீர்மானித்துள்ளார்.
இதில் மலை இயற்கை ஓவியம், ஒரு பெண்ணின் சித்தரம் மற்றும் மாடோனாவும் குழந்தையும் உள்ளிட்ட மூன்று ஓவியங்கள் அடங்கும்.
இதுதவிர இதுவரையிலும் கைப்பற்றப்பட்ட மொத்தம் 70 கலைபொருட்களை, உரிமையார்களிடம் பிரான்ஸ் ஒப்படைக்க உள்ளது.


0 comments:

கருத்துரையிடுக