siruppiddy nilavarai.com

Footer Widget 1

செவ்வாய், 14 அக்டோபர், 2014

இலங்கைக்கு ஜப்பான் அரசாங்கத்திடமிருந்து கப்பல் அன்பளிப்பு..

ஜப்பானிய அரசாங்கம் தொள்ளாயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான கப்பல் ஒன்றை இலங்கைக்கு அன்பளிப்புச் செய்துள்ளது.
ஜப்பானின் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (ஜெய்க்கா) மூலம் இந்தக் கப்பல் இலங்கைக்கு அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளது.
இந்தக் கப்பல் 50 மீட்டர் நீளம் கொண்டது. 624 தொன் எடை கொண்ட பொருட்களை ஏற்றிச் செல்லக் கூடியது. பல்தேவைகளுக்குப் பயன்படுத்தப்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்தக் கப்பலுக்கு சயுர என்று பெயரிடப்பட்டுள்ளதுடன், மீன்பிடித்துறை அமைச்சிற்கு இக்கப்பல் கையளிக்கப்படவுள்ளது.
சயுர கப்பல் மூலம் இலங்கையின் மீன்பிடித்துறைமுகங்களை ஆழமாக்கும் பணிகளை மேற்கொள்ள எதிர்பார்ப்பதாக மீன்பிடித்துறை அமைச்சு அறிவித்துள்ளது.
சயுர கப்பலை உத்தியோகபூர்வமாக இலங்கைக்கு கையளிக்கும் நிகழ்வு வரும் சனிக்கிழமை மாலை 03 மணிக்கு திக்ஓவிட்ட மீன்பிடித்துறைமுகத்தில் நடைபெறவுள்ளது.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 comments:

கருத்துரையிடுக