siruppiddy nilavarai.com

Footer Widget 1

வியாழன், 20 நவம்பர், 2014

தாயின் கருவில் உள்ள குழந்தைக்கு மூளையில் அறுவை சிகிச்சை

 பிரான்ஸ் நாட்டில் முதன் முறையாக கருவில் உள்ள குழந்தைக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை அளித்து சாதனை படைத்துள்ளனர்.
பிரான்ஸின் பாரிஸ் (Paris) நகரில் உள்ள நெக்கர் மருத்துவமனையில் (Necker hospital), கருவில் உள்ள 5 மாத குழந்தை ஒன்றிற்கு 2 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து ஸ்பினா பிஃபிடியா (spina bifida) என்ற பிறப்பு குறைபாடு நோயை மருத்துவர்கள் குணப்படுத்தியுள்ளனர்.
குழந்தையின் மூளையில் இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும், சிகிச்சை செய்த பத்து நாட்களில் குழந்தைக்கு இருந்த மூளை நோய் குணமடைந்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
4 மாதகளுக்கு முன்பு நடந்த இந்த சிகிச்சையின் முறையின் தகவல்களை, குழந்தை பிறந்தபின்பு தான் மருத்துவர்கள் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது..
தற்போது தாயும் சேயும் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக கூறப்படுகிறது
 
 இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 comments:

கருத்துரையிடுக