siruppiddy nilavarai.com

Footer Widget 1

புதன், 26 நவம்பர், 2014

தன்து இறந்ததாயை தோண்டி எடுத்த மகன்

தற்போது, உலகெங்கும் புகழ்பெற்ற ஒரு போட்டோ பாணி செல்ஃபி… தினமும், பல்துலக்குவது, குளிப்பது போன்று அன்றாட வாழ்வில் சாதாரணமான ஒன்றாகிவிட்டது இந்த செல்ஃபி. இந்நிலையில், சிலர் தனித்துவமான செல்ஃபி எடுப்பதற்காக உயிரை பணையம் வைத்து ஆபத்துகளில் இறங்குவது, வினொதமாக யாரும் செய்யாத ஒன்றை செய்வது ஆகியவற்றில் ஈடுபட்டுவருகின்றனர். அப்படித் தான் ஆர்வக்கோளாரில் லெபானனைச் சேர்ந்த நபர் ஒருவர், இறந்த தன் தாயை தோண்டி எடுத்து செல்ஃபி எடுத்து வெளியிட்டுள்ளார். லெபனானில் உள்ள சுடுகாடு ஒன்றில் காவலாளியாக பணி புரிந்து வருபவர், டெப் சாய்ஃலி (Deab Saiqly) என்ற நபர். இவர் ஏற்கனவே இறந்து புதைக்கப்பட்ட தன் தாயுடன் செல்ஃபி எடுத்து இணையத்தில் வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். இதற்காக, பல ஆண்டுகளுக்கு முன் இறந்த தன் தாயின் பிணத்தை கல்லரையிலிருந்து தோண்டி எடுத்து, அதனுடன் பல்லைக் காட்டி கொண்டு செல்ஃபி எடுத்துள்ளார் இந்த நபர். உலகெங்கிலும், பலர் இந்த மூட செயலிற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். இதை கண்ட மருத்துவர்கள் சிலர் இவருக்கு மனநிலை சரியில்லை என்றும் கூறியுள்ளனர். இதுகுறித்து தொலைக்காட்சி ஒன்றில் மனநல மருத்துவரிடம் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, ”எனக்கு அமெரிக்காவில் வரன் ஒன்று அமைந்தது ஆனால் மரணங்கள் எனக்கு விருப்பமான ஒன்றாக இருப்பதால் அதனை நான் நிராகரித்தேன்.” “இதுவரை நான் நிறைய சடலங்களுடன் செல்பி எடுத்துக் கொண்டுள்ளேன், ஆனால் தாயாருடன் எடுத்துக் கொண்ட செல்பியை மட்டும் பாதுகாப்பாக வைத்துள்ளேன்” என்று தெரிவித்துள்ளார். இந்த பேட்டியைப் பார்த்து பலர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் இவரை பேட்டி எடுத்த மருத்துவர் இவருக்கு மனநிலை சரியாக உள்ளது என்று தெரிவித்துள்ளார். இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 comments:

கருத்துரையிடுக