siruppiddy nilavarai.com

Footer Widget 1

ஞாயிறு, 11 ஜனவரி, 2015

ஏவுகணை பிரிவு அதிகாரியாக பெண் ஒருவர் நியமணம்!

இங்கிலாந்து விமானப் படையின் ஏவுகணை தாக்குதல் பிரிவுக்கு, முதன் முறையாக பெண் கட்டளை அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். நிக்கி தோமஸ் என்ற அந்த 36 வயது வீராங்கனை, இங்கிலாந்து விமானப் படையில் 12 ஆண்டுகளுக்கு முன் சேர்ந்தார். பின்னர் படிப்படியாக உயர்ந்து பயிற்சி விமானியாக பணியாற்றினார். அத்துடன் ஆப்கானிஸ்தானில் 3 மாதங்கள் தங்கியிருந்து, அங்கு நடந்த 35 தாக்குதலில் முக்கிய பங்கு வகித்தார்.

ஏவுகணை மற்றும் குண்டுகளை வீசும் போர் விமானங்களில், ஆண் விமானிகளுடன் தனது திறமையை வெளிப்படுத்தினார். இத்தகைய சிறப்பு பெற்ற நிக்கி தாமஸ் நேற்று ஏவுகணை பிரிவின் கமாண்டராக நியமிக்கப்பட்டார். இதன் மூலம், இங்கிலாந்து விமானப் படையின் ஏவுகணை பிரிவுக்கு நியமிக்கப்பட்ட முதல் பெண் கமாண்டர் என்ற பெருமையை நிக்கி பெற்றுள்ளார். இதுதொடர்பாக, இங்கிலாந்து ராணுவ செயலாளர் மைக்கேல் பாலோன் கூறுகையில், ‘ஆண்களை போலவே பெண்களும் போர் புரிவதில் திறமை வாய்ந்தவர்கள்.

இதுவரை அவர்களின் பணிகள் ராணுவத்தில் அங்கீகரிக்கப்படவில்லை. ராணுவத்தில் சேர்க்கும் போது அவர்களின் பாலினத்தை கருதாமல், அவர்களின் திறமையை வைத்து அங்கீகரிக்க வேண்டும். இத்தகைய திறமைமிக்க நிக்கி தாமஸ் தலைமையில் அடுத்த ஆண்டு முதல் பெண்களுக்கு தனியே படைப் பிரிவு துவங்கப்படும்‘ என்றார்.

ஏவுகணை விமானப் படையின் கமாண்டராக நியமனம் செய்யப்பட்டதற்கு மகிழ்ச்சி அடைகிறேன். கடந்த 12 ஆண்டுகளாக எத்தகைய கடினமான பணிகளையும் எளிதாக மேற்கொண்டு இருக்கிறேன். இந்த கமாண்டர் பணியையும் மிகச் சிறப்பாக செய்வேன் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த பணியில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் வித்தியாசம் இல்லை என்று கருதுகிறேன். விமானப் படையில் பெண்களும் சேர்ந்து பணியாற்ற முன்வர வேண்டும்‘ என்று நிக்கி தாமஸ் பூரிப்புடன் கூறினார். 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>> 

0 comments:

கருத்துரையிடுக