siruppiddy nilavarai.com

Footer Widget 1

புதன், 14 ஜனவரி, 2015

நாடாளுமன்றத்தில் இலங்கை தேர்தல் குறித்து இன்று விவாதம்!

  பிரி்த்தானிய இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் பிரித்தானிய பிரபுக்கள் சபையில் இன்று விவாதம் ஒன்று நடத்தப்படவுள்ளது. பிரபுக்கள் சபையின் உறுப்பினர் நேஸ்பை என்பவர், தேர்தல் தொடர்பில் மதிப்பீடு மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டமைக்கு அமைய சபை, நடந்து முடிந்த இலங்கை தேர்தல் தொடர்பில் கலந்துரையாடலை நடத்த இணங்கியுள்ளது.
ஏற்கனவே தேர்தலுக்கு முன்னரும் பிரித்தானிய பிரபுக்கள் சபை அது தொடர்பில் விவாததங்களை நடத்தியமை குறிப்பிடத்தக்கது.இதன்போது இலங்கையின் ஜனாதிபதி தேர்தலின் போது சர்வதேச கண்காணிப்பாளர்கள் மற்றும் பொதுநலவாய கண்காணிப்பாளர்களின் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டிருந்தது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 comments:

கருத்துரையிடுக