siruppiddy nilavarai.com

Footer Widget 1

வியாழன், 12 பிப்ரவரி, 2015

அமெரிக்க தூதரக வாகனங்களை தீவிரவாதிகள் கைப்பற்றினர்!

ஏமன் நாட்டில்  தூதரகம் மூடப்பட்ட பின்னர் தூதரக அமெரிக்க வானங்களை ஹவ்தி தீவிரவாதிகள் கைப்பற்றினர். 
அரேபிய தீபகற்ப பகுதியில் அல்-கொய்தா தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருவதுடன், அங்கு தொடர்ந்து பல்வேறு குண்டுவெடிப்பு மற்றும் தற்கொலைப்படை தாக்குதல் சம்பவங்களை நடத்தி 
வருகின்றனர். சமீபத்தில் ஏமன் நாட்டின் தலைநகர் சானாவை ஹவ்தி தீவிரவாதிகள் கைப்பற்றினர். மேலும் அதிபரின் மாளிகையையும் அவர்கள் கைவசப்படுத்தினர். இதனையடுத்து அதிபர் அப்ட் ராப்பு மன்சூல் ஹாதி மற்றும் அவரது அமைச்சரவை ராஜினாமா செய்தது.
தொடர்ந்து ஏமனில் அரசியல் குழப்பநிலை நீடித்து வருவதாலும், வன்முறை சம்பவங்கள் நடந்து வருவதாலும் ஏமனில் உள்ள தூதரகத்தை அமெரிக்கா திடீரென மூடியது. தூதரக ஊழியர்கள் வெளியேற்றப்பட்டனர். இதனை அமெரிக்க வெளியுறவுத்துறை உறுதி செய்துள்ளது
. இங்கிலாந்து தூதரகமும் இதேபோன்று மூடப்பட்டுள்ளது. இதை லண்டனில் உள்ள வெளியுறவு அலுவலகம் தெரிவித்துள்ளது. சானாவில் பாதுகாப்பு பிரச்சனை ஏற்பட்டதையடுத்து 
பல்வேறு நாடுகளை சேர்ந்த தூதரகங்கள் மூடப்பட்டன. அமெரிக்கா தூதரகம் மூடப்பட்ட பின்னர் 25 தூதரக வானங்களை ஹவ்தி தீவிரவாதிகள் கைப்பற்றினர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 comments:

கருத்துரையிடுக