siruppiddy nilavarai.com

Footer Widget 1

சனி, 25 ஜூலை, 2015

கள்ளத்தனமாக செல்லும் அகதிகளின் மரணம் அதிகரிப்பு

பிரான்சில் இருந்து பிரித்தானியாவுக்கு கள்ளத்தனமாக செல்லும் அகதிகள் தொடர்ந்து மரணமடைந்து வருவதையடுத்து பிரான்ஸ் பாதுகாப்பை பலப்படுத்த முடிவு செய்துள்ளது. 
பிரான்ஸ் நாட்டில் இருந்து பிரித்தானியாவுக்கு கலைஸ் பகுதி வழியாக பல அகதிகள் கள்ளத்தனமாக செல்கின்றனர்.
இவ்வாறு செல்பவர்களில் பலர் இந்த முயற்சியின் போது மரணமடைகின்றனர்.
இந்நிலையில் சமீபத்தில் பெண் ஒருவர் சாலை விபத்தில் பலியானார். மேலும் ஆண் ஒருவர் ரயிலின் கூரையில் இறந்துகிடந்தார்.
இது தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அகதிகள் கள்ளத்தனமாக செல்வதை தடுக்கும் வகையில் பாதுகாப்பை பலப்படுத்த பிரான்ஸ் முடிவு செய்துள்ளது. மேலும் யூரோ டனல் நிறுவனமும் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக 13 மில்லியன் யூரோவை ஒதிக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


0 comments:

கருத்துரையிடுக