siruppiddy nilavarai.com

Footer Widget 1

செவ்வாய், 29 செப்டம்பர், 2015

உணவகத்தில் இருமாதங்களில் இரண்டாவது தடவையும் கொள்ளை!

ரொறன்ரோ Fairbank அருகிலுள்ள ஷவர்மா உணவகத்தில் கடந்த இரு மாதங்களில் இரண்டாவது தடவையாக கொள்ளையிடப்பட்டுள்ளது.கஸ்டில்பீல்ட் அவனியூ அருகில், 2488 டவ்றின் வீதியில் அமைந்துள்ள இந்த உணவகத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 10.30 மணியளவில் துப்பாக்கி முனையில் கொள்ளையிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர் துப்பாக்கியை காட்டி பணத்தை கேட்டு மிரட்டிய போதிலும் பணம் பெறப்பட்டதாக என்பது தொடர்பில் விபரங்கள் தெரியவரவில்லை.சந்தேகநபர் 25 வயது மதிக்கத்தக்க கறுப்பு மனிதர் எனவும் சம்பவத்தின் போது முகத்தை மறைத்து முகமூடி 
அணித்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொள்ளை சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.குறித்த உணவகத்தில் கடந்த ஓகஸ்ட் மாதம் 13 ஆம் திகதியும் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



0 comments:

கருத்துரையிடுக