siruppiddy nilavarai.com

Footer Widget 1

திங்கள், 4 ஜனவரி, 2016

மருத்துவ அதிகாரி விடுத்துள்ள தீவிர குளிர் காலநிலை எச்சரிக்கை?

கனடா- ரொறொன்ரோவின் சுகாதார தலைமை மருத்துவ அதிகாரி தீவிர குளிர் காலநிலை எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். ஞாயிற்றுகிழமை இரவு இரட்டை இலக்க எதிர்மறை வெப்பநிலை காணப்படும் என முன்கூட்டிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுகிழமை
 இரவு -15 C ஆக 
காணப்படும் என கனடா சுற்றுசூழல் பிரிவினர் அறிவித்துள்ளனர். இதயம் அல்லது சுவாசம் சம்பந்தமான நிலைமை உள்ளவர்கள், வயோதிபர், சிறுவர்கள் மற்றும் வெளிக்கள பணியாளர்களை இரவு 
வீடுகளின் உள்ளே
 இருக்கும் படியும் அல்லது முன்னெச்சரிக்கையாக இருக்குமாறும் டாக்டர் டேவிட் மெக்யோன் எச்சரிக்கின்றார். குடியிருப்பாளர்கள் மேலதிக ஆடைகளை அணிந்து கொள்ளுமாறும் வெளிச்சத்திற்குட்படும் தோல் பகுதிகளை மூடுமாறும் மதுபானம் அருந்துவதை
 நிறுத்துமாறும்
 கேட்டுக்கொள்ள படுகின்றனர். மதுபானம் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். ஆனால் சிலருக்கு உடலை வெப்பமாக உணரவைக்கும் எனவும் கூறப்படுகின்றது. 24-மணித்தியால உட்புகல் மையங்கள் மேலதிக படுக்கைள் கொண்ட தங்குமிடங்கள் போன்றன திறந்திருக்கும் 
எனவும் மெக்யோன்
 தெரிவித்தார். எச்சரிக்கை காரணமாக தங்குமிடங்களிற்கு செல்பவர்களிற்கு உதவுவதற்கு TTC ரோக்கன்கள் வழங்கப்படும். திங்கள்கிழமையும் வெப்பநிலை -11 C காணப்படும் என கனடா சுற்றுசூழல் பிரிவு தெரிவிக்கின்றது. 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


0 comments:

கருத்துரையிடுக