siruppiddy nilavarai.com

Footer Widget 1

வியாழன், 13 அக்டோபர், 2016

சட்டவிரோதமான பிரான்ஸ் செல்ல முயன்ற தமிழரொருவர் கைது!

சட்டவிரோதமான முறையில் பிரான்சுக்கு செல்ல முயன்ற குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் கொடிகாமம் பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு விமான நிலையத்தில் வைத்து இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் சுமார் ஒருவாரத்துக்கு முன்னதாக தனது சொந்த கடவுச்சீட்டில் துருக்கி சென்றடைந்திருந்தார்.
அதன் பின்னர் அங்குள்ள இலங்கை தரகர் ஒருவர் மூலமாக போலி கடவுச்சீட்டில் பிரான்ஸ் செல்ல முயன்ற போது துருக்கிய அதிகாரிகள் அவரைக் கைது செய்து தடுத்து வைத்திருந்தனர்.
பின்னர் குறித்த நபர் இன்று துருக்கியிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டிருந்தார். கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தவுடன் அவர் குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடம் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதன் பின்னர் நீர்கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர்செய்யவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 comments:

கருத்துரையிடுக