siruppiddy nilavarai.com

Footer Widget 1

திங்கள், 26 டிசம்பர், 2016

பெண்ணை வல்லுறவுக்கு உட்படுத்திய 26 வயதான நபர் கைது!

நெதர்லாந்து நாட்டை சேர்ந்த பெண்ணொருவரை ஹூங்கம கடற்கரையில் வைத்து பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக கூறப்படும் நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் முறைப்பாடு கிடைத்து 24 மணி நேரத்திற்குள் இந்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
61 வயதான நெதர்லாந்து பெண்ணே பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் 26 வயதான நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்து வெளிநாட்டு பெண் பொலிஸ் அவசர அழைப்பு தொலைபேசி இலக்கமான 119 தொடர்பு கொண்டு தெரியப்படுத்தியதை அடுத்து, ஹூங்கம பொலிஸ் அதிகாரிகள் சந்தேக நபரை கைது 
செய்துள்ளனர்.
சந்தேக நபர் அடிக்கடி கடற்கரையில் உலாவும் நபர் என தெரியவந்துள்ளது. பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட பெண் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


0 comments:

கருத்துரையிடுக