siruppiddy nilavarai.com

Footer Widget 1

செவ்வாய், 28 செப்டம்பர், 2021

அடுக்குமாடித் தொடரில் சுவீடன் நாட்டில் திடீர் வெடிவிபத்து

 சுவீடன் நாட்டின் தென்மேற்கு நகரான கோத்தன்பர்க்கில் குடியிருப்பு கட்டிடம் ஒன்றில் இன்று அதிகாலை 5 மணியளவில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 25 பேர் வரையில் காயடைந்துள்ளனர்.
அடுக்குமாடி மற்றும் ஜன்னல்களிலிருந்து சாம்பல் புகை வெளியேறியதால் தீயணைப்பு வீரர்கள் கட்டிடத்திலிருந்து மக்களை வெளியேற்றி 
வருகின்றனர். 
இந்த சம்பவத்தில் 20 முதல் 25 பேர் வரை காயமடைந்துள்ளனர்.  3 பேர் வரை பலத்த காயமடைந்து உள்ளனர்.  அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
குண்டுவெடிப்பினை தொடர்ந்து பல்வேறு கட்டிடங்களுக்கும் தீ பரவியுள்ளது.  இதனை தொடர்ந்து 100 முதல் 200 பேர் வரை அந்த கட்டிடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டு உள்ளனர்.
இந்த வெடிவிவத்தில் குண்டு வைத்து வெடிக்கப்பட்டதா என்பது தொடர்பில் காவல்துறையினர் விசாரணை 
நடத்திவருகின்றனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>>>>>


0 comments:

கருத்துரையிடுக