siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

ஞாயிறு, 15 பிப்ரவரி, 2015

பஸ்-ரெயில் மோதல் 16 பேர் பலி!!

அமெரிக்கா மெக்சிககோவில் உள்ள அனாஹீவாக் என்ற நகரில் ஆள் இல்லாத தண்டவாளத்தை கடக்க முயன்ற பயணிகள் பேருந்து மீது அந்த வழியாக வந்த சரக்கு ரெயில் மோதி 16 பேர் பலியாகினர். 
விபத்து குறித்து தகவல் அறிந்த மெக்சிகோ போலீசார் விரைந்து வந்து விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை 
மீட்டு மருத்துவமனையில்  கொண்டு சேர்த்தனர். இந்த் விபத்தில்   30 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வியாழன், 12 பிப்ரவரி, 2015

அமெரிக்க தூதரக வாகனங்களை தீவிரவாதிகள் கைப்பற்றினர்!

ஏமன் நாட்டில்  தூதரகம் மூடப்பட்ட பின்னர் தூதரக அமெரிக்க வானங்களை ஹவ்தி தீவிரவாதிகள் கைப்பற்றினர். 
அரேபிய தீபகற்ப பகுதியில் அல்-கொய்தா தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருவதுடன், அங்கு தொடர்ந்து பல்வேறு குண்டுவெடிப்பு மற்றும் தற்கொலைப்படை தாக்குதல் சம்பவங்களை நடத்தி 
வருகின்றனர். சமீபத்தில் ஏமன் நாட்டின் தலைநகர் சானாவை ஹவ்தி தீவிரவாதிகள் கைப்பற்றினர். மேலும் அதிபரின் மாளிகையையும் அவர்கள் கைவசப்படுத்தினர். இதனையடுத்து அதிபர் அப்ட் ராப்பு மன்சூல் ஹாதி மற்றும் அவரது அமைச்சரவை ராஜினாமா செய்தது.
தொடர்ந்து ஏமனில் அரசியல் குழப்பநிலை நீடித்து வருவதாலும், வன்முறை சம்பவங்கள் நடந்து வருவதாலும் ஏமனில் உள்ள தூதரகத்தை அமெரிக்கா திடீரென மூடியது. தூதரக ஊழியர்கள் வெளியேற்றப்பட்டனர். இதனை அமெரிக்க வெளியுறவுத்துறை உறுதி செய்துள்ளது
. இங்கிலாந்து தூதரகமும் இதேபோன்று மூடப்பட்டுள்ளது. இதை லண்டனில் உள்ள வெளியுறவு அலுவலகம் தெரிவித்துள்ளது. சானாவில் பாதுகாப்பு பிரச்சனை ஏற்பட்டதையடுத்து 
பல்வேறு நாடுகளை சேர்ந்த தூதரகங்கள் மூடப்பட்டன. அமெரிக்கா தூதரகம் மூடப்பட்ட பின்னர் 25 தூதரக வானங்களை ஹவ்தி தீவிரவாதிகள் கைப்பற்றினர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

புதன், 4 பிப்ரவரி, 2015

நடக்கிறது: பாக். முப்படை அணிவகுப்பில் சீன அதிபர் சிறப்பு விருந்தினர் ??

 பாகிஸ்தானில் அடுத்த மாதம் 23–ந் தேதி நடக்கவுள்ள முப்படை அணிவகுப்பில் சீன அதிபர் ஜின் பிங்கை சிறப்பு விருந்தினராக அழைக்க நவாஸ் ஷெரீப் அரசு அதிரடி முடிவு எடுத்துள்ளது.
ஒபாமா, சிறப்பு விருந்தினர்
இந்தியாவில் 66–வது குடியரசு தினம், கடந்த மாதம் 26–ந் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி தலைநகர் டெல்லியில் நடந்த கொண்டாட்டங்களில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அமெரிக்க ஜனாதிபதி ஒருவர், இந்திய குடியரசு தின கொண்டாட்டங்களில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றது இதுவே முதல் முறை ஆகும்.
இது பாகிஸ்தானுக்கு அதிர்ச்சியை அளித்தது. அங்குள்ள பஞ்சாப் மாகாணத்தின் கவர்னர் சவுத்ரி முகமது சர்வார், ‘‘அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா இந்தியாவுக்கு குடியரசு தினவிழா சிறப்பு விருந்தினராக வந்ததும், முக்கியத்துவம் வாய்ந்த சிவில் அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதும், பாகிஸ்தானுக்கு ராஜ்யரீதியிலான தோல்வியாக அமைந்து விட்டது’’ என விமர்சித்தார்.
அதிரடி முடிவு
இந்த நிலையில், பாகிஸ்தானில் அடுத்த மாதம், 23–ந் தேதி குடியரசு தின விழா, பாகிஸ்தான் தினம் என்ற பெயரில் கொண்டாடப்பட உள்ளது. அங்கு குடியரசு தின விழாவின்போது, முப்படை அணிவகுப்பு நடத்துவது வழக்கம். ஆனால் சமீப காலமாக பாதுகாப்பு காரணங்களை கூறி, முப்படை அணிவகுப்பு நடத்துவதில்லை. கடைசியாக கடந்த 2008–ம் ஆண்டு முஷரப் ஆட்சிக்காலத்தில்தான் முப்படை அணிவகுப்பு நடைபெற்றது.
இப்போது, 6 ஆண்டு இடைவெளிக்கு பின்னர் இந்த ஆண்டு குடியரசு தின விழாவையொட்டி ராவல்பிண்டி நகரில் முப்படை அணிவகுப்பு நடத்தவும், அதற்கு சீன அதிபர் ஜின்பிங்கை தலைமை விருந்தினராக அழைக்கவும் நவாஸ் ஷெரீப் அரசு அதிரடியாக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ராணுவ வட்டார தகவல்
இது தொடர்பாக மூத்த ராணுவ அதிகாரி ஒருவர், ‘‘மார்ச் 23–ந் தேதி முப்படை அணிவகுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என கூறியதாக ‘டான் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.
அதே நாளேடு, இந்த அணிவகுப்புக்கு சீன அதிபர் ஜின் பிங்கை சிறப்பு விருந்தினராக அழைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ராஜ்ய ரீதியிலான தகவலை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டு இருக்கிறது.
இந்த முப்படை அணிவகுப்பு, 
ராவல்பிண்டியில் உள்ள ராணுவ தலைமையகத்தின் ஏற்பாட்டில் நடக்கிறது. எந்த இடத்தில் அணிவகுப்பை நடத்துவது என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
இந்த முப்படை அணிவகுப்பு, பாகிஸ்தானின் முப்படை பலத்தை பறைசாற்றுவதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கலாசார நிகழ்ச்சிகளும் இந்த அணிவகுப்பின்போது இடம் பெறும் என தகவல்கள் கூறுகின்றன.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

சனி, 31 ஜனவரி, 2015

புதிய பொருளாதார தடை ரஷியா மீது இல்லை; ஐரோப்பிய நாடுகள் ??

 
உக்ரைனின் கிழக்கு பகுதியில் ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கும், அரசு படைகளுக்கும் இடையே மீண்டும் தாக்குதல்கள் நடந்து வருகின்றன. டண்ட்ஸ்க் மற்றும் லுகான்ஸ்க் பகுதிகளுக்கு இடையே உள்ள முக்கிய ரெயில் நிலையமான டெபால்ட்சேவ் பகுதியில் இரு படையினரும் தொடர்ந்து குண்டு மழை பொழிவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
உக்ரைன் விவகாரத்தில் ரஷியாவுக்கு
 பங்கு இல்லை என அந்த நாடு தொடர்ந்து கூறி வரும் நிலையில், ரஷியாவுக்கு எதிராக ஐரோப்பிய நாடுகள் ஏற்கனவே பொருளாதார தடை விதித்து உள்ளன. ரஷியாவில் உள்ள ஏராளமான செல்வந்தர்களின் சொத்துகள் முடக்கப்பட்டு உள்ளதுடன், அவர்களுக்கு பயண தடையும் விதிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் ரஷியா மீது மேலும் பொருளாதார தடை விதிக்க இந்த நாடுகள் பரிசீலித்து வந்தன. ஆனால் பிரஸ்சல்சில் நேற்று நடந்த ஐரோப்பிய நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் கூட்டத்தில், ரஷியா மீது புதிய பொருளாதார தடை விதிக்க மறுப்பு 
தெரிவிக்கப்பட்டது.
எனினும் ஏற்கனவே ரஷியா மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடையை செப்டம்பர் மாதம் வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டது. இந்த தடையில் மேலும் சில ரஷியர்களை இணைப்பது குறித்து பரிசீலிக்கவும் முடிவு செய்யப்பட்டது. 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

செவ்வாய், 27 ஜனவரி, 2015

வான்வழி தாக்குதலில் வெளிநாட்டு தீவிரவாதிகள்பலி!

பாகிஸ்தானின் பெஷாவரில் உள்ள ராணுவ பள்ளிக்கூ டத்தில் கடந்த டிசம்பர் மாதம் 16–ந்தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 133 குழந்தைகள் உள்பட 154 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து
 தீவிரவாதிகள் மீதான தாக்குதலை பாகிஸ்தான் ராணுவம் தீவிரப்படுத்தி உள்ளது. இந்த நிலையில் வடக்கு வஜிரிஸ்தானில் உள்ள தத்தா ஹெல் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் போர் விமானங்கள் மூலமாக வான்வழி தாக்குதல் நடத்தியது
இந்த அதிரடி தாக்குதலில் வெளிநாட்டு தீவிரவாதிகள் உள்பட 35 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். வடக்கு வஜிரிஸ்தானில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் பாகிஸ்தான் 
ராணுவம் நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 1,200–க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டு இருப்பது நினைவுகூரத்தக்கது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

சனி, 24 ஜனவரி, 2015

டென்னிஸ் வீராங்கனை வைலட்டாடெஜிடிரேவா திடீர் மரணம்!

ரஷ்ய டென்னிஸ் வீராங்கனை வைலட்டாடெஜிடிரேவா பயிற்சி செய்து கொண்டிருக்கும் போது திடீரென மாரடைப்பால் இறந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரஷ்யாவில் உள்ள ரோஸ்டோவ் நகரில் பிறந்த வைலட்டா டெஜிடிரேவா, உலக அளவில் டென்னிஸ் வீரர்கள் வரிசை பட்டியலில் 1084வது இடத்தில் உள்ளார். இறுதியாக துருக்கியில்
 நடைபெற்ற காலிறுதி சுற்றில் இவர் கலந்து கொண்டார். வளர்ந்து வரும் இளம் வீராங்கனையான வைலட்டா டெஜிடிரேவா, தனது அபாரா ஆட்டத்தால் இவரது விளையாட்டு திறமை படிப்படியாக உலகிற்கு தெரியவந்து கொண்டிருந்தது.
இந்நிலையில், பயிற்சியின்போது டெஜிரரேவா மரணம் அடைந்தது மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
 இவரது மரணம் குறித்து உடனடியாக தகவல்கள் ஏதும் வெளிவரவில்லை. இவரது நெருங்கிய சக டென்னிஸ் வீராங்கனையான அனஸ்டாசியா வைலட்டா டெஜிடிரேவா மரணம்  நம்பமுடியவில்லை. இருப்பினும் அவரது ஆன்மா சாந்தி அடைய நவற்கிரி இணையங்களும்நிலாவரை இணையங்களும் இறைவனை பிரார்த்திக்கின்றது,   
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வெள்ளி, 23 ஜனவரி, 2015

துணி பார்சலில் கடல் ஆமைகளை இறக்குமதி செய்த வருக்கு சிறை!

 வங்காள தேசத்தில் இருந்து சிங்கப்பூருக்கு  அரியவகை கருப்பு ஆமைகளை இறக்குமதி செய்த இந்தியருக்கு
 அந்நாட்டு நீதிமன்றம் 16 மாத சிறை தண்டனை விதித்துள்ளது. இந்தியரான ஜெய்ஸ்வால் அருண் ஹரிஷ் சந்திரா (42) என்பவர் சிங்கப்பூரில் ஜவுளி இறக்குமதி தொழில் செய்து வருகிறார்.
 இந்த இறக்குமதி உரிமத்தை பயன்படுத்தி வங்காள தேசத்தில் இருந்து குட்டைகளில் வாழும் அரிய வகை கருப்பு ஆமைகளை உரிய அனுமதி இன்றி இவர் கள்ளத்தனமாக சிங்கப்பூருக்கு 
இறக்குமதி செய்துள்ளார். சங்கி விமான நிலையத்தில் சுமார் 190 ஆமைகள் கொண்ட 3 துணி பைகளை கண்டுபிடித்த சுங்கத்துறை அதிகாரிகள், அருண் ஹரிஷ் சந்திராவை கைது செய்தனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வெள்ளி, 16 ஜனவரி, 2015

கிரிக்கெட் அணி கேவிக் கேவி அழுத கெவின் பீ்ட்டர்சன்

இங்கிலாந்து அணியிலிருந்து தன்னை நீக்கிய செய்தியைக் கேள்விப்பட்டதும் தான் அழுததாக முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் அணி கேப்டன் கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.
தற்போது இங்கிலாந்து அணியில் கெவின் பீட்டர்சன் இல்லை. அவரை நீக்கி விட்டனர். அவரது நீக்கம் அப்போது இங்கிலாந்து அணியில் சலசலப்புகளை ஏற்படுத்தியது. கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு டெஸ்ட் போட்டிகளை ஆட இங்கிலாந்து போயிருந்தது. அபபோது ஐந்து போட்டிகளிலும் அது தோல்வியைத் தழுவியது. இதனால் பெரும் சர்ச்சைக்குள்ளானது இங்கிலாந்து அணி.
இதையடுத்து கெவின் பீ்ட்டர்சனை அதிரடியாக நீக்கியது இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு. இதுகுறித்து தற்போது கருத்து தெரிவித்துள்ள கெவின் பீட்டர்சன், அணியினரை கிரிக்கெட் போர்டு மதிப்பதில்லை. என்னைப் பார்த்துப் பொறாமைப்பட்டனர். இருப்பினும் தற்போதைய கேப்டன் இயான் மார்கன் மட்டும் என்னை அணியில் சேர்க்க வேண்டும் என்று பகிரங்கமாக அணி நிர்வாகத்திடம் கூறினார்.
நான் நீக்கப்பட்ட செய்தியை அறிந்ததும் அழுது விட்டேன். இதை நான் மறுக்க விரும்பவில்லை என்று கூறியுள்ளார் கெவின் பீ்ட்டர்சன்.
கெவின் பீட்டர்சன் அதன் பின்னர் டெல்லி டேர்டெவில்ஸ் ஐபிஎல் அணியில் இடம் பெற்று ஆடினார். ஆனால் தற்போது அந்த அணியிலிருந்தும் அவரை நீக்கி விட்டனர் என்பது 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வியாழன், 15 ஜனவரி, 2015

ராஜினாமா ஸ்காட்லாந்து பிரதமர்??

இங்கிலாந்துடன் ஸ்காட்லாந்து இணைந்து இருக்கத் தேவையில்லை, நாம் தனி நாடாக பிரிந்து செல்வோம் என்ற கோரிக்கையை வைத்து தீவிரமாக பிரசாரம் செய்து வந்தவர் ஸ்காட்டிஷ் தேசிய கட்சியின் தலைவரான அலெக்ஸ் சல்மாண்ட். இவர் ஸ்காட்லாந்து பிரதமராகவும் பதவி வகித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம், இங்கிலாந்தில் இருந்து பிரிந்து செல்வதா? வேண்டாமா? என்பது குறித்த கருத்து வாக்கெடுப்பு ஸ்காட்லாந்து மக்களிடம் எடுக்கப்பட்டது. இதில் 55.3 சதவீத மக்கள் இங்கிலாந்துடன் இணைந்திருக்க ஆதரவு தெரிவித்தனர்.
 அலெக்ஸ் சல்மாண்ட் முயற்சி தோல்வியடைந்தது. இதையடுத்து ஸ்காட்லாந்து பிரதமர் மற்றும் கட்சியின் தலைவர் பதவிகளில் இருந்து ராஜினாமா செய்வதாக அலெக்ஸ் சல்மாண்ட் நேற்று அறிவித்தார்.
ஸ்காட்லாந்தின் அடுத்த பிரதமரும், கட்சியின் புதிய தலைவரும் வருகிற நவம்பர் மாதம் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

நீந்திச் செல்ல முயன்ற அமெரிக்க இளைஞர் கைது!!

தென்கொரியாவிலிருந்து வடகொரியா நோக்கி நீந்திச் செல்ல முற்பட்ட அமெரிக்கப் பிரஜையொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோனை தான் சந்திக்க வேண்டுமென தென்கொரிய படையினரிடம் குறித்த 20 வயதான குறித்த இளைஞன் கூறியுள்ளதாக தெரவிக்கப்படுகிறது.
இதற்கு முன்னரும் வடகொரியாவை நோக்கி நீந்திச் செல்ல முற்பட்ட அமெரிக்கப் பிரஜைகள் இருவர் தென்கொரியாவில் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
அமெரிக்கப் பிரஜையொருவருக்கு வடகொரியாவில் 6 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>