siruppiddy nilavarai.com

Footer Widget 1

சனி, 11 ஆகஸ்ட், 2012

வல்வெட்டியில் சுமார் பத்து நிமிடம் நீடித்த துப்பாக்கிச் சூட்டுச் சத்தம்!

11.08.2012.
யாழ். வல்வெட்டிப் பகுதியில் இன்று மாலை 6:30 மணியளவில் துப்பாக்கி வெடிச் சத்தம் போன்ற சத்தம் சுமார் பத்து நிமிடங்கள் நீடித்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவித்துள்ளன.
வழமைக்கு மாறாக குறிப்பிட்ட இடத்தில் இராணுவத்தினரும் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். பிரதேச மக்கள் பெரும் பதற்றத்தில் இருப்பதாகவும் வட்டாரச் செய்திகள் தெரிவித்துள்ளன.
குறிப்பாக, மோட்டார் சைக்கிளில் வருபவர்களை மறித்து சோதனை நடாத்தி வருகின்றனர். இதேவேளை, சில தினங்களாக யாழில் இராணுவத்தினரின் கெடுபிடிகள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஆனாலும் எவ்வாறு துப்பாக்கிச் சத்தம் கேட்டது? குறிப்பாக எதற்காக துப்பாக்கிச் வேட்டுச் சத்தம் எழுப்பப்பட்டது என ஊகிக்கமுடியவில்லை எனவும் பிரதேசமக்கள் தெரிவித்துள்ளனர்

0 comments:

கருத்துரையிடுக