siruppiddy nilavarai.com

Footer Widget 1

வெள்ளி, 3 ஆகஸ்ட், 2012

இறுதி யுத்தத்தில் தமிழர்களால் கைவிடப்பட்ட வாகனங்கள் சிங்களவரால் அபகரிப்பு

 
04.08.2012.
முல்லைத்தீவு, மாவட்டம் முள்ளிவாய்க்கால் பகுதியில் இறுதியுத்தத்தின்போது கைவிடப்பட்ட பெருமளவு வாகனங்கள் தென்னிலங்கை சிங்கள வர்த்தகர்களால் தினசரி அபகரித்துச் செல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர், முள்ளிவாய்க்கால் வீதி திறக்கப்பட்டதைத் தொடர்ந்து பெருமளவு சிங்கள வர்த்தகர்கள் சுதந்திரமாக வந்து நடமாடுவதோடு, தமிழ் மக்களால் கைவிடப்பட்ட வாகனங்களை எடுத்துச் செல்கின்றனர்.
இதற்கு முழுமையான ஒத்துழைப்பினை படையினர் வழங்கி வருகின்றனர்.
ஆனால் வாகனங்களுக்குச் சொந்தக்காரர்கள் தமது வாகனங்களை சென்று பார்வையிடுவதற்கும் கூட படையினர் அனுமதி மறுத்திருக்கின்றனர்.
மேலும் இவ்வாறன வர்த்தகர்கள், சில சந்தர்ப்பங்களில் பொதுமக்களின் வாகனங்களை முழுமையாகவும், அவற்றின் இயந்திரப் பகுதியையும் எடுத்துச் செல்கின்றனர். ஆனால் இது குறித்து மாவட்டச் செயலகமும், பொலிஸாரும் எந்த நடவடிக்கையினையும் எடுத்திருக்கவில்லை.
இந்நிலையில் பொதுமக்களின் சொத்துக்கள் கேட்பாரற்ற நிலையில் சிங்கள வர்த்தகர்களால் எடுத்துச் செல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சி- கரைச்சி பிரதேச செயலகத்திற் கருகில் யுத்தகாலத்தில் கைவிடப்பட்ட வாகனங்கள் வைக்கப்பட்டுள்ள பகுதியிலிருந்து தினசரி வாகனங்களையும், அதன் உதி ரிப்பாகங்களையும் திருடிச் செல்கின்றமை அம்பலத்திற்கு வந்துள்ளது.
குறித்த பகுதியில் பெருமளவு வாகனங்கள் போடப்பட்டுள்ளது. இந்நிலையில் வாகனங்க ளை உரிமைகோருமாறு மாவட்டச் செயலகம் அறிவித்துள்ளதுடன், பொதுமக்களே முறை யற்ற விதத்தில் வாகனங்களையும் உதிரிப்பாகங்களையும் எடுத்துச் செல்கின்றனர்.
என குற்றம்சாட்டியிருந்தார். ஆனால் அவ்வாறு பொதுமக்கள் எவரும் வாகனங்களை கொள்ளையிடுவது கிடையாது, இராணுவத்தினரும், இராணுவத்தினருக்கும், பொலிஸாரு க்கும் சார்பான தரப்புக்களே இவ்வாறு கொள்ளையில் ஈடுபடுகின்றனர்.
இதனை தடுக்க முடியாத அரசாங்க அதிபர் கண்மூடித்தனமாக பொதுமக்கள் மீது குற்ற ம் சாட்டியுள்ளமை வெளியாகியுள்ளது. அண்மையில் இராணுவத்தினர் வாகனங்களின் உதிரிப்பாகங்களை எடுத்து வருகின்றமை புகைப்படமாக சிக்கியுள்ளது.
இதன் மூலம் இராணுவத்தினரே சகல வாகனத்திருட்டு, மற்றும் வாகன உதிரிப்பாகத் திருட்டு ஆகியவற்றில் ஈடுபட்டு வருகின்றமை வெளிப்படையாகியுள்ளது.

 

0 comments:

கருத்துரையிடுக