siruppiddy nilavarai.com

Footer Widget 1

வெள்ளி, 3 ஆகஸ்ட், 2012

இனவாதத்தை தூண்டும் வகையில் பிரசாரம் செய்யக் கூடாது: தேர்தல் கண்காணிப்பு அமைப்பு

 வெள்ளிக்கிழமை, 03 ஓகஸ்ட் 2012,
இனவாதத்தை தூண்டும் வகையில் பிரசாரம் செய்யக் கூடாது என தேசிய தேர்தல் கண்காணிப்பு மத்திய நிலையம் அரசியல் கட்சிகளிடம் கோரியுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் இனவாத அடிப்படையில் பிரசாரம் மேற்கொள்ளப்படுகின்றது. 30 ஆண்டு யுத்தத்தின் பின்னர் நாட்டில் தற்போது அமைதி ஏற்பட்டுள்ளது.
இவ்வாறான ஓர் நிலைமையில் மீளவும் இனவாதத்தை தூண்டும் வகையில் பிரசாரம் செய்யக் கூடாது. கடந்த கால அனுபவங்களை பாடமாகக் கொண்டு செயற்பட வேண்டியது அவசியமானது.
அரசியல் திட்டங்கள் மற்றும் கொள்கைகளை மக்களுக்கு தெளிவுபடுத்தி அதன் மூலம் வாக்குகளைப் பெற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டுமென தேசிய தேர்தல் கண்காணிப்பு மத்திய நிலையம் அரசியல் கட்சிகளிடம் கோரியுள்ளது.

0 comments:

கருத்துரையிடுக