siruppiddy nilavarai.com

Footer Widget 1

வியாழன், 13 செப்டம்பர், 2012

கொம்பனித்தெரு வீடுகள் அகற்றப்படுவது குறித்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கு மீதான விசாரணை!

 
 
By.Rajah.கொம்பனித்தெரு - 7ம் ஏக்கர் பகுதியில் உள்ள வீடுகளை அகற்றி அங்கு அபிவிருத்தித் திட்டம் மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை இன்று விசாரிக்க உயர் நீதிமன்றம் விசாரித்துள்ளது.
அந்த பிரதேசத்தில் வசிக்கும் சிலரால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீண்ட காலமாக தாம் அந்த பகுதியில் வசித்து வருவதாகவும், அங்கிருந்து வெளியேறும் பட்சத்தில் தமக்கு இருப்பிடம் இல்லாது போகுமெனவும் அவர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
தமது வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும் எனவும் மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மனுவை பரிசீலித்த மூன்று நீதியரசர்கள் கொண்ட குழு, மனுவை ஒக்டோபர் 1ம் திகதிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ள தீர்மானித்துள்ளது