siruppiddy nilavarai.com

Footer Widget 1

வியாழன், 18 அக்டோபர், 2012

விரைவில் தயாராகிறது பசங்க பார்ட்-2

 Thursday, 18 October 2012, By.Rajah.
இயக்குனர் பாலாஜி சக்திவேலின் ஆஸ்தான ஒளிப்பதிவாளரான எஸ்.டி.விஜய் மில்டன் தமிழில் நிறைய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
காதல் படம் தொடங்கி சமீபத்தில் வெளிவந்த வழக்கு எண் 18/9 படம் வரைக்கு இவர்களது வெற்றி கூட்டணி தொடர்ந்தது.
ஒளிப்பதிவாளராக மட்டுமல்லாமல் மில்டன் சிறந்த படைப்பாளியாகவும் திகழ்ந்துள்ளார்.
அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது என்ற படத்தை இயக்கிய மில்டன், தற்போது தன்னுடைய சொந்த தயாரிப்பில் பசங்க படத்தின் இரண்டாம் பாகமாக பசங்க பார்ட்-2 வை இயக்க உள்ளார்.
பசங்க படத்தின் இயக்குனர் பாண்டியராஜன் இந்த படத்திற்கு வசனம் எழுத உள்ளார். இந்த படத்துக்காக சமீபத்தில் பசங்க படத்தில் நடித்த அதே கதாபாத்திரங்களை வைத்து டெஸ்ட் ஷூட்டு எடுத்துள்ளார்.
அவர்களும் சிறப்பாக நடிக்க மில்டனுக்கு ரொம்பவே பிடித்து போய்விட்டது. இதனையடுத்து படப்பிடிப்பை இம்மாத இறுதியில் ஆரம்பிக்கலாம் என்று கூறியுள்ளாராம்