siruppiddy nilavarai.com

Footer Widget 1

வெள்ளி, 5 அக்டோபர், 2012

தென்னாபிரிக்காவில் உள்ள நாடுகளில் ஒன்றான

Friday 05 October 2012..By.Rajah. சுவாசிலன் நாட்டின் அரசர் பற்றிய திடுக்கிடும் தகவல்!இலங்கைக்கும் சென்றிருந்தார்கடந்த ஆகஸ்ட் மாதம் சுவாசிலன், நாட்டின் மன்னர் இலங்கை சென்றிருந்தார். 3 நாள் உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்ட மன்னருக்கு மகிந்தர் செங்கம்பள வரவேற்ப்பை வழங்கினார். தென்னாபிரிக்காவில் உள்ள நாடுகளில் ஒன்றான சுவாசிலன் நாட்டின் அரசர் என, தன்னைக் கூறிக்கொள்ளும் மஸ்வட்3 என்னும் மன்னர் மீது பல குற்றச்சாட்டுகள் இருக்கிறது.
குறிப்பாக மேற்குலக நாடுகள் அவரை தமது நாட்டுக்கு அழைப்பது இல்லை. இந் நிலையில் அவருக்கு ஒரு அங்கிகாரத்தைக் கொடுக்கும் வகையில், தமது நாட்டிற்கு வருமாறு மகிந்த அழைப்பை விடுத்தார். பல காலமாக வெளிநாடு எதற்கும் செல்லாமல் அடைபட்டிருந்த மஸ்வட் இதனை விட்டுவிடுவாரா என்ன ? உடனே கிளம்பி இலங்கை சென்றுவிட்டார். மன்னரோடு சேர்ந்து கட்டித் தழுவி மகிந்தர் புகைப்படங்களை எடுக்துக்கொண்டார். இவை எல்லாம் உலகளாவிய ரீதியில் ஊடகங்களில் அடிபட்டது அப்போது.

ஆனால் இப்போது இது மிகவும் அருவருப்பான ஒரு விடையமாக மாறியுள்ளது. காரணம் பலகாலமாகவே, மேற்குலகம் அவரைக் கண்டித்து வந்துள்ளது. குறிப்பாக இவருக்கு சுமார் 12 மனைவிகள் அதிகாரபூர்வமாக உள்ளனராம். அதிகாரமற்ற வகையில் நூற்றுக்கணக்கான மனைவிகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனைக் கூட மன்னித்துவிடலாம், ஆனால் சிறுமிகளை பாலியல் வல்லுறவுக்கு ஈடுபடுத்துவது,
அவர்களை செக்ஸ் அடிமைகளாகப் பயன்படுத்துவது, மற்றும் இளம் பெண்களை கற்பழிப்பது என்று இவர்மேல் ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் இருக்கின்றது. இதனை நிரூபிக்கும் வகையில் சமீபத்தில் சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இருப்புக் கரங்கள் கொண்டு தனது நாட்டை ஆண்டுவரும் இம் மன்னர் சாம்பிராஜியத்துக்குள், அவ்வளவு எழிதில் வெளிநாட்டவர்கள் சென்று திரும்பமுடியாது.

இருப்பினும் , மஸ்வட் இராட்சியத்துக்கு உட்பட்ட பகுதியில், பெண்களையும் சிறிமிகளையும் அதிகாரிகள் கொடுமைப்படுத்தும் காட்சிகள் தற்போது புகைப்பட ஆதாரமாக வெளியாகியுள்ளது. சிறுமிகளையும், இளம்பெண்களையும், சில அதிகாரிகள் கூட்டம் கூட்டமாக அழைத்துச் செல்வதும், பின்னர் அவர்களை வெட்டவெளியில் படுக்க வைத்து, பிறப்பு உறுப்பை சோதித்து அவர்கள் கன்னியா இல்லை கன்னி கழித்தவர்களா என்று பார்த்து சான்றிதழ்கள் வழங்குகின்றனர்.
கன்னிப் பெண்களுக்கு மட்டுமே இந்தச் சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது. இவ்வாறு சான்றிதழ்களைப் பெற்ற பெண்களும் சிறுமிகளுமே அரசவைக்கு வேலைகளுக்கு அனுப்பி வைக்கபடுகின்றனர். இவர்களில் ஒருவரை நாளுக்கு நாள் மன்னர், எடுத்துக்கொள்வார். இதனை இந் நாட்டின் பெண்கள் பெரும் பாக்கியமாகக் கருதுகின்றனர். அதுபோக இப்படியான ஒரு மாயத் தோற்றத்தில், அந் நாட்டுப் பெண்களை வைத்திருக்கிறார்கள் என்பதே உண்மையாகும்.

சிறு வயதில் இருந்தே, பெண் பிள்ளைகளின் பெற்றோர், மன்னர் குறிது செய்திகளைக் கூறி பிள்ளைகளை வளர்க்கின்றனராம். இதனால் அவர்கள் வளர்ந்ததும், மன்னருக்கு செக்ஸ் அடிமைகளாகச் செல்ல விரும்புகிறார்கள். ஒரு நாட்டில் சுதந்திர தினம் அல்லது தேசிய தினம் அனுஷ்டிக்கப்பாட்டால், தமது நாட்டின் இராணுவ பலத்தை இல்லையேல் தொழில் நுட்ப்ப வளத்தைக் காட்டுவது வளக்கம்.
ஆனால் சமீபத்தில் சுவாசிலன் நாட்டில் நடைபெற்ற தேசிய தினத்தில், ஆயிரக்கணக்கான பெண்கள் அரை நிர்வாணமாக மன்னருக்கு முன் அணிவகுத்துச் சென்றுள்ளனர் என்றால் பாருங்களேன் ! இப்படிப்பட்ட பெருமையுள்ள மன்னரைத் தான் மகிந்தர் தனது நாட்டிற்கு அழைத்து செங்கம்பள வரவேற்ப்பை அளித்துள்ளார். இதைகேட்ட ஆய்வாளர் ஒருவர் கூறினார்