siruppiddy nilavarai.com

Footer Widget 1

வெள்ளி, 5 அக்டோபர், 2012

வெள்ளை வானில் கடத்த முயற்சித்த சம்பவம்! மடக்கிப்பிடிப்பு!


Friday 05 October 2012..By.Rajah.கொலன்னாவை நகர சபைத் தலைவரான ரவீந்திர உதயசாந்தவை வெள்ளை வானில் வந்தோர் கடத்த முயற்சித்த சம்பவம் ஒன்று நேற்று 5.00 மணியளவில் இடம்பெறுள்ளது.
நேற்று மாலை 5.00 மணியளவில் நகரசபைத் தலைவர் காணப்பட்ட கொலன்னாவை விஹார மாவத்தைப் பிரதேசத்திற்குள் குறித்த வெள்ளை வான் பிரவேசித்துள்ளது. உடனடியாகச் செயலில் இறங்கிய பிரதேச சபைத் தலைவர், அங்கிருந்து வெளியேறி தனது ஆதரவாளர்களுக்கு தொலைபேசி ஊடாக இது குறித்த தகவல்களை வழங்கியுள்ளார். இதனையடுத்து அங்கு திரண்ட அவரது ஆதரவாளர்கள் அந்த வெள்ளை வானை சூழ்ந்து கொண்டு சிறைப்பிடித்துக் கொண்டனர்.
தகவலறிந்த வெல்லம்பிட்டிய பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வெள்ளை வானில் காணப்பட்டவர்களைத் தங்களது பொறுப்பில் எடுத்துக் கொண்டனர். குறித்த வெள்ளை வானில் பெருமளவிலான ஆயுதங்களும் காணப்பட்டன.
இதற்கு முன்னரும் இவர் வெள்ளைவான்காரர்களால் கடத்திச் செல்ல முயற்சிக்கப்பட்ட போதும் அது கைகூடவில்லை. இவரது சகோதரர் ஒருவரும் முன்னர் வெள்ளைவான் வந்த ஆயுதாரிகளால் கடத்தப்பட்டிருந்தார். ஆனால் இவர் குறித்து இதுவரை எவ்வித தகவல்களும் இல்லை