siruppiddy nilavarai.com

Footer Widget 1

செவ்வாய், 23 அக்டோபர், 2012

கொழும்பின் பிரபல கல்லூரி மாணவர் குழுக்களுக்கு இடையில்

         
Tuesday 23 October 2012  By.Rajah.
கொழும்பின் பிரபல பாடசாலைகளான ரோயல் மற்றும் தேஸ்டன் கல்லூரி மாணவர் குழுக்களுக்கு இடையில் மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
கொழும்பு-7 ரீட் வீதி பகுதியிலேயே இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள பொலிஸார் நிலைமை கட்டுபாட்டுக்குள்ள கொண்டு வர முயற்சித்துள்ளதாகவும் இதனால் இப்பகுதியில் பாரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இம் மாணவக்குழு மோதலால் சுற்றுவட்டாரத்தில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த மோதலில் கருவாத்தோட்டம் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
மேலும் இம்மோதலில் ஆறு மாணவர்களும் காயமடைந்ததாகவும் தெரியவந்துள்ளது.