siruppiddy nilavarai.com

Footer Widget 1

திங்கள், 5 நவம்பர், 2012

14 வயது மாணவனுடன் தவறான உறவு: கர்ப்பமான ஆசிரியை

05.11.2012.By.Rajah.அமெரிக்காவில் தன்னிடம் படித்த 14 வயது மாணவனுடன் தவறான முறையில் உறவு வைத்திருந்த ஆசிரியை கைது செய்யப்பட்டார்.
அமெரிக்காவின் டெக்ஸாஸில் உள்ள பெஸ்கார் கன்ட்ரி பகுதியில் உள்ள பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிபவர் அமன்டா சோடலோ.

இவருக்கும், இவரிடம் படித்த 14 வயது மாணவனுக்கும் தவறான உறவு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் ஆசிரியை அமன்டா கர்ப்பமானார்.

இதை குறித்த மாணவன் தன் சக நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டதால், வெளியே தெரியவந்துள்ளது.

இதனையடுத்து ஆசிரியை கைது செய்யப்பட்டார். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கைது செய்யப்பட்ட ஆசிரியை தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார்

0 comments:

கருத்துரையிடுக