siruppiddy nilavarai.com

Footer Widget 1

வியாழன், 20 டிசம்பர், 2012

மருத்துவ கல்லூரி மாணவியை கற்பழித்ததை ஒப்புக்கொண்டார்

டெல்லியில் மருத்துவக் கல்லூரி மாணவி கற்பழிக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட முகேஷ் என்பவர், தனது தவறை ஒப்புக் கொண்டதுடன் வெட்கி தலை குனிந்தார்.
இவ்வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த முகேஷ், பவன் மற்றும் வினய் ஆகியோர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.
அப்போது மாணவியை கற்பழித்ததை ஒப்புக்கொண்ட முகேஷ், தான் ஒரு வெறுக்கத்தக்க செயலில் ஈடுபட்டதாக கூறி வெட்கித் தலை குனிந்தார்.
மேலும் நாளை நடைபெறும் அடையாள அணிவகுப்பில் பங்கேற்க தயார் என்றும் அவர் தெரிவித்தார்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் குற்றம்சாட்டப்பட்ட முகேஷை 14 நாள் நீதிமன்றக் காவலில் திஹார் சிறையில் அடைக்க உத்தரவிட்டது.
அதேநேரத்தில் பவன் மற்றும் வினயை 4 நாள் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
அவர்களும் அடையாள அணிவகுப்பில் பங்கேற்கும் திகதி குறித்து பின்னர் முடிவு செய்யப்படும் என டெல்லி நீதிமன்ற நீதிபதி தெரிவித்தார்.
இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ராம்சிங் ஏற்கனவே கைது செய்யப்பட்டுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது

0 comments:

கருத்துரையிடுக