siruppiddy nilavarai.com

Footer Widget 1

சனி, 22 டிசம்பர், 2012

ஐ.நா ஹெலிகொப்டரை சுட்டு வீழ்த்தியது தெற்கு சூடான்

ஐ.நா ஹெலிகொப்டரை தெற்கு சூடான் இராணுவத்தினர் சுட்டு வீழ்த்தியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சூடானிலிருந்து தனியாக பிரிந்த தெற்கு சூடானின் ஜோங்லெய் மாநிலத்தில், ஐ.நா ஹெலிகொப்டரை அந்நாட்டு இராணுவத்தினர் சுட்டு வீழ்த்தினர். அதில் இருந்த 4 ரஷ்ய உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலுக்கு பான் கி மூன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், இதுதொடர்பாக தெற்கு சூடான் அரசு உடனடி விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் தவறு செய்தவர்களை தண்டிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.
ஐ.நா ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டதை முதலில் மறுத்த இராணுவம், ரஷ்ய ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தியதாக கூறியது.
அதன் பின் போராளிகளுக்கு ஆயுதங்கள் ஏற்றி வந்த சூடான் ஹெலிகொப்டர் என நினைத்து சுட்டதாக தெரிவித்தது.
இருப்பினும் நடந்த தவறுக்கு வருத்தம் தெரிவிப்பதாக இராணுவ செய்தித் தொடர்பாளர் பிலிப் ஆகர் தெரிவித்தார்.
ஜோங்லெய் மாநிலத்தில் இயங்கும் டேவிட் யாவு யாவு தலைமையிலான போராளிக் குழுவிற்கு, சூடான் அரசு விமானங்கள் மூலம் ஆயுதங்கள் வழங்குவதாக தெற்கு சூடான் அடிக்கடி குற்றம் சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.


0 comments:

கருத்துரையிடுக