siruppiddy nilavarai.com

Footer Widget 1

சனி, 29 டிசம்பர், 2012

சுவிஸில் நாய், பூனைக்கறி சாப்பிடும் விவசாயிகள்

சுவிட்சர்லாந்தின் கிழக்கு மற்றும் மத்திய பகுதிகளில் வசிக்கும் விவசாயிகள் நாய் மற்றும் பூனை இறைச்சிகளை சாப்பிடுவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. உலகில் சீனா, வியட்நாம் போன்ற நாடுகளில் நாய், பூனை சாப்பிடுபவர்கள் அதிகம் இருக்கிறார்கள்.
சுவிஸ் குளிர்பிரதேசம் என்பதால் அங்குள்ள மக்கள் இறைச்சியை பெரும்பாலும் விரும்பி சாப்பிடுகின்றனர்.
ஆனால் நாய், பூனை என்பது வீட்டின் செல்லப்பிராணிகள், இதன் இறைச்சிகளை சாப்பிடுவதை சமூகம் ஏற்றுக்கொள்ளாது.
சுவிஸில் அல்பென்ஸெல் மற்றும் செயிண்ட் கேலன் மாநிலங்களில் வாழும் விவசாயிகள் இந்த பிராணிகளை அதிகம் விரும்பி உண்கின்றனர்.
இது குறித்து அவர்கள், இறைச்சி என்றால் ஆடு, மாடு, பூனை, நாய் என்ற வேறுபாடு கிடையாது என்றார்.
சுவிஸில் இதை தடுக்கும் படியான அதிகாரப்பூர்வ சட்டமேதும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

கருத்துரையிடுக