siruppiddy nilavarai.com

Footer Widget 1

வெள்ளி, 28 டிசம்பர், 2012

வசதிக்கு பஞ்சமில்லை: மனநிறைவுடன் புத்தாண்டை வரவேற்கும்

 
கனடாவில் வாழும் மக்கள் புத்தாண்டை மிகுந்த நம்பிக்கையோடும் புத்துணர்ச்சியோடும் வரவேற்க காத்திருக்கின்றனர். கனடியர்களின் புத்துணரச்சிக்கு அடிப்படை காரணம், தங்களது நிதி நிலைமை சிறப்பாக இருக்கிறது என்று அவர்கள் நம்புகின்றனர்.
இது தொடர்பாக ஹேரிஸ்- டெசிமோ நிறுவனம் மூலமாக கருத்துக்கணிப்பு நடத்திய CIBC, 70 சதவீதம் பேர் தங்களது தற்போதைய நிதிநிலை குறித்து மனநிறைவடைந்துள்ளனர்.
ஆனால் இந்த மனநிறைவு சென்ற ஆண்டு 63 சதவீதம் பேரிடம் மட்டுமே காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதில் மற்றொருமொரு சிறப்பாவது, 65 வயதுக்கு மேற்பட்டவர்களில் 73 சதவீதம் பேர் மிகுந்த மனநிறைவுடன் இருக்கின்றனர்.
ஆனால் 25-34 வயதுடையவர்களில் 67 சதவீதம் பேர் மட்டுமே மனநிறைவு பெற்றுள்ளனர்.
இதுதவிர மேலும் பலர், எதிர்காலத்தில் தங்களின் நிதிநிலமை சிறப்படையும் என்றும் தாம் எதிர்பார்த்த இலக்குகள் அடைவது உறுதி என்றும் நம்புகின்றனர்.
இந்த நம்பிக்கை சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு 2 சதவீதம் உயர்ந்து 74ஐ எட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கனடா முழுவதும் அக்டோபர் 25 முதல் நவம்பர் 4 வரை 2000 பேரிடம் தொலைபேசி மூலம் இந்த கருத்து கணிப்பு நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

0 comments:

கருத்துரையிடுக