siruppiddy nilavarai.com

Footer Widget 1

சனி, 25 மே, 2013

சர்ச்சையை உருவாக்கியுள்ள லண்டன் வூலிச்

லண்டனின் வூலிச் பகுதியில் கடந்த புதனன்று வீதியில் வைத்து பிரிட்டிஷ் படைவீரர் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அங்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதனை முன்கூட்டியே தடுத்திருக்கலாம் என்ற கருத்தை பிரித்தானிய அரசு நிராகரித்துள்ளது.
கொலையாளிகளிடமிருந்து முன்கூட்டியே வெளிப்பட்ட சமிக்ஞைகளை அதிகாரிகள் தவறவிட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
சம்பவ இடத்தில் பிடிபட்ட இஸ்லாமிய தீவிரவாதிகள் இரண்டுபேரும் பிரித்தானிய எம்-ஐ-5 புலனாய்வுப் பிரிவினரால் ஏற்கனவே விசாரிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
ஆனால், அவர்களைத் தொடர்ந்தும் கண்காணிக்க அதிகாரிகள் தவறிவிட்டதாக விமர்சிக்கப்படுகிறது.
'எல்லாநேரத்திலும் ஒவ்வொருவரையும் கண்காணிக்க முடியாது, வன்முறைகளில் ஈடுபட நினைக்கும் தனிப்பட்ட நபர்களினால் சுதந்திரமான சமூக கட்டமைப்பு தான் பாதிக்கப்படுகிறது' என்று மூத்த அமைச்சர் எரிக் பிக்கிள்ஸ் தெரிவித்துள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு நபர்கள் தொடர்பிலும் பிரித்தானிய பாதுகாப்பு புலனாய்வுத் துறையினருக்கு என்ன தகவல்கள் தெரிந்திருந்தன என்று அந்நாட்டு நாடாளுமன்றம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
பிரித்தானிய ஃபுசிலியர்ஸ் றோயல் றெஜிமெண்டின் இரண்டாவது படைப்பிரிவைச் சேர்ந்த லீ ரிக்பி என்பவரே வைத்து கொலை செய்யப்பட்டவர் ஆவார்.
குறித்த இராணுவ வீரர் 22 வயதானவர் என்பதுடன் ஆப்கானிலும் பணியாற்றியுள்ளார்.
இஸ்லாமிய கோஷங்களை எழுப்பிய இருவரால் பட்டப் பகலில் இந்த இராணுவ வீரர் இறைச்சி வெட்டும் கத்திகள் மற்றும் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டுள்ளார்.
தாக்குதலை நடத்திய பிறகு, அந்த இருவரும் தப்பியோட முயற்சிக்கவில்லையெனவும் பொலிஸார் வந்த போது அவர்களை நோக்கி இந்த இருவரும் ஓடியுள்ளனர். பின்னர் அவர்கள் மீது துப்பாகிப் பிரயோகம் மேற்கொண்ட பொலிஸார் இருவரையும் கைது செய்தனர்.
தற்போது அவர்கள் இருவரும் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் இருவரது பேரும் இதுவரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படாத போதிலும் ஒருவர் கிழக்கு லண்டனின் ரொம்போர்டைச் சேர்ந்த 28 வயதான மைக்கல் அடிபொலாஜோ எனவும் மற்றையவர் தன் கிழக்கு லண்டனின் கிரீன் விச்சைச் சேர்ந்த மைக்கல் அடிபோவ்ல் எனவும் பி.பி.சி செய்தி வெளியிட்டுள்ளது.
இச்சம்பவம் இங்கிலாந்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

0 comments:

கருத்துரையிடுக