siruppiddy nilavarai.com

Footer Widget 1

திங்கள், 6 மே, 2013

மீனவர்களுக்கு ஆந்திராவில் தர்ம அடி,

 ஆந்திர மாநிலம் காகிநாடா அருகே இந்திய கடல் பகுதிக்குள் அத்துமீறி புகுந்து மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் 11 பேர் கடந்த 4 நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டனர். இந்திய கடலோரக்காவல் படையால் கைது செய்யப்பட்ட அவர்கள் பின்னர் காக்கிநாடா மரைன் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
அவர்கள் 11 பேரும், தும்முலாபேட்டையில் 2 காவலர்கள் பாதுகாப்புடன் ஒரு வீட்டில் வைக்கப்பட்டிருந்தனர். மின்சாரம் இல்லாத நேரத்தில், அவர்கள் அனைவரும் காற்று வாங்குவதற்காக வெளியே சென்று இருக்கிறார்கள்.
 அப்போது, அவர்கள் அந்த ஊர் காரர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து அந்த ஊர் காரர்கள் சேர்ந்து இலங்கை மீனவர்களுக்கு தர்ம அடி கொடுத்திருக்கிறார்கள்.
இதில் பலத்த காயமடைந்த இலங்கை மீனவர்களில் 3 பேர், மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். முன்னதாக பிடிபட்ட மற்ற 14 இலங்கை மீனவர்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஐதராபாத் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.




 

0 comments:

கருத்துரையிடுக