[ செவ்வாய்க்கிழமை, 23 யூலை 2013, 02:38.54 பி.ப GMT ]
பிரான்ஸின் வடக்கு பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அனல் காற்று வீசலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலை படிப்படையாகக் குறைவடைந்து தற்போது மழை பெய்ய ஆரம்பித்துள்ளது.
கடும் மழையினால் வீதிகளின் மேலாக நீர் தேங்கியிருப்பதால், மக்கள் போக்குவரத்திற்கு சிரமப்படுகின்றனர். கட்டிடங்களினுள்ளும் நீர் உட்புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதேவேளை மழையுடன் கூடிய கடுங்காற்று காணப்படுவதனால் புயல் ஏற்படும் சாத்தியம் அதிகளவில் இருப்பதாகவும், இது மணிக்கு 100 கிலோமீற்றர் வேகத்தினைக் கொண்டிருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே மக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
{காணொளி, இணைப்பு)
0 comments:
கருத்துரையிடுக