siruppiddy nilavarai.com

Footer Widget 1

புதன், 24 ஜூலை, 2013

அஸ்தியை திருடிய வாலிபர்போதைப்பொருள் என நினைத்து


அமெரிக்காவில் உள்ள டென்னிசி நகரில் 28 வயதான வில்லியம்   என்ற வாலிபர் பக்கத்து வீட்டு கதவை உடைத்து ஒரு மர்ம பெட்டியை திருடினார்.
அந்த பெட்டியுடன் தனது பாட்டி வீட்டிற்கு தப்பி ஓடினார். ஆனால் அதில் அவர் எதிர்பார்த்த பொருள் இல்லாமல் பெரும் ஏமாற்றம் அடைந்தார்.
பிறகு வில்லியம்சை கைது செய்து விசாரித்ததில் அவர் கூறிய பதில் பொலிஸாரை வியப்படைய வைத்தது.
‘அந்த பெட்டியில் போதைப்பொருளை வைத்திருப்பதாக நினைத்து திருடினேன். ஆனால் அதில் அஸ்தி இருந்தது’ என்று கூறினார்.
பெட்டியின் உரிமையாளர் ஸ்டீவன் மிட்லே கூறுகையில்
அது தனது தாயின் அஸ்தி என்று தெரிவித்தார். அதை அவர் ஏன் பாதுகாத்து வருகிறார் என்பது தெரியவில்லை. இருப்பினும் வீடு புகுந்து திருடியதற்காக வில்லியம்சை பொலிஸார் கைது செய்தனர்

0 comments:

கருத்துரையிடுக