siruppiddy nilavarai.com

Footer Widget 1

செவ்வாய், 17 மார்ச், 2020

கொரோனா வைரஸ் கட்டாரிலும் பரவுகின்றது கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை

கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தல் நடவடிக்கைகளின் கீழ் கட்டார் மார்ச் 18 முதல் இரண்டு வாரங்களுக்கு முழுமை அடைப்பை அறிவித்துள்ளது.இதன்படி வருகைதரும் விமானங்கள் இரண்டு வாரங்களுக்கு இடைநிறுத்தப்படவுள்ளன.பொதுப் போக்குவரத்துக்கள் உட்பட்ட அனைத்து பணிகளும் இடை நிறுத்தப்பட்டு 
கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இரண்டு வாரங்களுக்கு பின்னர் நிலைமை ஆராயப்பட்டு அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராயப்படும் என்று கட்டார் அரசாங்கம் அறிவித்துள்ளது.55 வயதானவர்கள், கர்ப்பிணி தாய்மார், சுவாசப்பிரச்சினை உடையவர்கள் 
வீடுகளில் இருந்தே பணியாற்ற 
அனுமதிக்கப்படுவர்.
அனைத்து பொது போக்குவரத்துக்களும் நேற்று முதலே மறு அறிவித்தல் வரை நிறுத்தப்பட்டுள்ளன. உணவு மற்றும் மருந்துகளுக்கு 6 மாத கால வரிவிலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.தெரிவு 
செய்யப்பட்டவர்களுக்கு மின்சாரம் மற்றும் நீர் கட்டணங்களில் இருந்து 6 மாத விலக்களிக்கப்பட்டுள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 comments:

கருத்துரையிடுக