ஞாயிற்றுக்கிழமை, 19 ஓகஸ்ட் 2012,சீனாவைச் சேர்ந்த மாணவி வெண் சியா யு(வயது 23 ) உலக அழகியாக தெரிவு
செய்யப்பட்டுள்ளார்.
சீனா தலைநகர் பெய்ஜிங்கில் தோங்க்செங் என்னுமிடத்திலுள்ள உடற்பயிற்சி மைதான
அரங்கில் உலக அழகி போட்டி நடைபெற்றது.
இப்போட்டியில் பல்வேறு நாடுகளிலிருந்து அழகிகள் கலந்து கொண்டனர். பல்வேறு
சுற்றுகளாக நடந்த இப்போட்டியில் இறுதியாக சீன அழகி வெண் சியா யு தெரிவு பெற்றார்.
பலவண்ண விளக்குகள் மின்னிய அரங்கில் கடந்தாண்டு உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட
வெனிசுவேலா அழகி இவியன் சார்கோஸ், தனது தங்க கிரீடத்தை சீனா அழகி வெண் சியா
யுவுக்கு சூட்டி மகிழ்ந்தார்.
இசை பயிலும் மாணவியான 23 வயது உலக அழகி வெண் சியா யு தான் ஒரு இசை ஆசிரியையாக வர
விரும்புவதாக கூறினார்.
வேல்ஸ் அழகியான சோபி மோல்ஸ் இரண்டாவதாகவும், அவுஸ்திரேலியா நாட்டின் அழகி
ஜெசிக்கா கஹவாட்டி மூன்றாவது அழகியாகவும் தெரிவு செய்யப்பட்டனர்.
குறிப்பு: பிரசுரிப்புக்களுக்கு வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை செய்யப்படுவதில்லை. அக்கருத்துக்களுக்கு வாசகர்களே பொறுப்பு. அவதூரான கருத்துக்களை அடையாளம் காட்டினால் அவை நீக்கப்படும். கருத்துக்கள் தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டால் அதற்கும் வாசகரே பொறூப்பாவார்.அன்பான வாசகர்களே! அர்த்தமுள்ள கருத்துக்களைப் பதிவு செய்திடுங்கள்.
நிர்வாகி தேவன் ராஜா
எமது இந்த இணையச் செய்திச் சேவையை கடந்த 14-01-2012.ஆம் ஆண்டு ஆரம்பிக்கபபட் டு நடாத்தி வருகின்றேன் . இந்தஇணைய சேவைகள் மேலும் தொடந்து நடாத்த உங்களுடைய ஒத்துழைப்புக்களும் ஆதரவும் எனக்கு தேவை.என்னால் முக்கியமான எங்கள் ஊர் இணையங்கள் நவற்கிரி .கொம் நவக்கிரி ,கொம் நிலாவரை.கொம் ஆகியன முக்கிய இணையத்துடன் இன்னும் .பல இணையங்கள் உள்ளன அவை பல விதமான செய்திகளை
உடனுக்குடன் செய்திகளை வெளியிட்டு வருகின்றது தொடர்ந்தும் ஆதராவாக இருக்கும் அனைவருக்கும் அன்பு நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்