siruppiddy nilavarai.com

Footer Widget 1

ஞாயிறு, 19 ஆகஸ்ட், 2012

தமிழக மீனவர்கள் மீது இலங்கை சிங்கள கடற்படை அரிவாள் வெட்டு! வலைகள் நாசம்

ஞாயிற்றுக்கிழமை, 19 ஓகஸ்ட் 2012தமிழ்நாடு, நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே வெள்ளப்பள்ளத்திலிருந்து கடலுக்கு சென்ற மீனவர்களை இலங்கை கடற்படையினர் அரிவாளால் வெட்டி விரட்டியடித்துள்ளனர். இராமேஸ்வரம் மீனவர்களின் வலைகளை அறுத்தெறிந்துள்ளனர்.
இது குறித்து தெரியவருவதாவது:
வெள்ளப்பள்ளத்தில் இருந்து சுமார் 60 பைபர் கிளாஸ் படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
கச்சதீவு அருகே அவர்களை வழிமறித்த சிங்கள கடற்படையினர் அரிவாளால் தாக்கி விரட்டியடித்துள்ளனர்.
மேலும் மீனவர்களின் படகுகளை சேதப்படுத்திய கடற்படையினர், அவர்களின் மீன்களையும் பறித்துச் சென்றனர்.
இதையடுத்து 10 படகுகளில் இருந்த மீனவர்கள் கரைக்குத் திரும்பினர். மற்றவர்களும் கரைக்கு திரும்புவார்கள் என்று எதிர்பார்ப்பதாக அந்த மீனவர்கள் தெரிவித்தனர்.
இதேபோல் இராமேஸ்வரம் மீனவர்களது வலைகளையும் சிங்கள கடற்படையினர் அறுத்தெறிந்ததாக புகார் தெரிவித்துள்ளனர்