siruppiddy nilavarai.com

Footer Widget 1

ஞாயிறு, 19 ஆகஸ்ட், 2012

தமன்னா மீது வழக்கு தொடர இந்தி தயாரிப்பாளர் முடிவு

19.08.2012.நடிகை தமன்னா தன்னிடம் செய்து கொண்ட ஒப்பந்தத்தை மீறிவிட்டார் என்று இந்தி தயாரிப்பாளர் ஒருவர் கூறியுள்ளார்.
நடிகை தமன்னா 9 ஆண்டுகளுக்கு முன்பு செய்து கொண்ட ஒப்பந்தம் அவருக்கு இப்போது தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
சலிம் அக்தர் என்ற இந்தி தயாரிப்பாளர் தன் படமான “சாந்து ஷா ரோஷன் செஹ்ரா” என்ற படத்தில் நடிக்க தமன்னாவை ஒப்பந்தம் செய்தார்.
இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்ததற்காக 2005- 2010 வரை தமன்னா நடிக்கும் படங்களில் அவர் வாங்கும் ஊதியத்திலிருந்து 25 சதவீதத்தை தனக்கு தரவேண்டுமென சலிம் அக்தர் கேட்டிருக்கிறார்.
இதற்கு தமன்னாவும் சம்மதம் தெரிவித்ததுடன் ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நடிகை தமன்னாவுக்கு தென்னிந்திய பட வாய்ப்புகள் வந்தது. இதன் காரணமாக தன்னுடைய அழைப்புகளை அவர் ஏற்கவில்லை என்றும் ஒப்பந்தப்படி பணத்தை தரவில்லை என்றும் சலிம் அக்தர் கூறியிருக்கிறார்.
இந்த ஒப்பந்த மீறலுக்காக தமன்னா மீது வழக்கு தொடர முடிவு செய்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.